மேலும் அறிய

3வது கணவர்.. குழந்தை பாக்கியமில்லை.. சென்னையை அலறவிட்ட பெண்ணின் வாக்குமூலம்

Chennai News: சென்னை கண்ணகி நகரை சேர்ந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில், கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் கடத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை திருவேற்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கணவன் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியதாஸ் மற்றும் நிஷாந்தி தம்பதியினருக்கு, 13 ஆண்டுகள் குழந்தை இல்லாததால், தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை குழந்தையை குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். இந்தநிலையில், ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.

அரசு ஊழியர் என நாடகம்

குழந்தையின் தாய் நிஷாந்தியிடம், தான் ஒரு அரசு ஊழியர் எனக்கூறிய அந்த பெண், அரசின் நிதியுதவி பெற்றுத் தருவதாகக் கூறி குழந்தையுடன் தாய் நிஷாந்தியை தியாகராயர் நகர் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். ஓட்டலில் நிஷாந்தி கைகழுவச் சென்றபோது தீபா என்பவர் குழந்தையை கடத்திச் சென்றார்.

கதறி அழுத தாய்

குழந்தையுடன் பெண் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, கதறி அழுதபடி தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். உடனடியாக தனி படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

குழந்தையை கடத்திய பெண், தனது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையிலும், ஆட்டோ பதிவெண்ணை வைத்தும் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் சென்னை திருவேற்காட்டில் போலீசார் குழந்தையை மீட்டு கடத்திய தீபாவின் மூன்றாவது கணவர் அரியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சந்தேகம் இருந்ததால் உடனடியாக மருத்துவமனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனி படை போலீசார் நடவடிக்கை 

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது தீபாவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தபோது தீபா தணிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

போலீசார் தீபாவிடம் நடத்திய விசாரணையில், திருவேற்காடு பகுதியில் தோழி ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது‌. தனக்கு திருமணம் ஆகி நீண்ட நாளாக குழந்தை இல்லை என அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்மணி தன்னை கண்ணகி நகர் பகுதிகளில் ஏழ்மையானவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கலாம் என கூறியுள்ளார். 

தீபா அங்கு சென்ற போது ஆரோக்கியதாஸ் நிஷாந்தி தம்பதியினரை பார்த்துள்ளனர். அவர்களது குழந்தை அவருக்கு பிடித்துள்ளது, அவர்களுக்கும் பத்தாண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதால், திட்டமிட்டு கடத்தியதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சென்னையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
Embed widget