மேலும் அறிய

3வது கணவர்.. குழந்தை பாக்கியமில்லை.. சென்னையை அலறவிட்ட பெண்ணின் வாக்குமூலம்

Chennai News: சென்னை கண்ணகி நகரை சேர்ந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில், கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் கடத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை திருவேற்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கணவன் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியதாஸ் மற்றும் நிஷாந்தி தம்பதியினருக்கு, 13 ஆண்டுகள் குழந்தை இல்லாததால், தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை குழந்தையை குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். இந்தநிலையில், ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.

அரசு ஊழியர் என நாடகம்

குழந்தையின் தாய் நிஷாந்தியிடம், தான் ஒரு அரசு ஊழியர் எனக்கூறிய அந்த பெண், அரசின் நிதியுதவி பெற்றுத் தருவதாகக் கூறி குழந்தையுடன் தாய் நிஷாந்தியை தியாகராயர் நகர் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். ஓட்டலில் நிஷாந்தி கைகழுவச் சென்றபோது தீபா என்பவர் குழந்தையை கடத்திச் சென்றார்.

கதறி அழுத தாய்

குழந்தையுடன் பெண் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, கதறி அழுதபடி தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். உடனடியாக தனி படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

குழந்தையை கடத்திய பெண், தனது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையிலும், ஆட்டோ பதிவெண்ணை வைத்தும் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் சென்னை திருவேற்காட்டில் போலீசார் குழந்தையை மீட்டு கடத்திய தீபாவின் மூன்றாவது கணவர் அரியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சந்தேகம் இருந்ததால் உடனடியாக மருத்துவமனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனி படை போலீசார் நடவடிக்கை 

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது தீபாவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தபோது தீபா தணிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

போலீசார் தீபாவிடம் நடத்திய விசாரணையில், திருவேற்காடு பகுதியில் தோழி ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது‌. தனக்கு திருமணம் ஆகி நீண்ட நாளாக குழந்தை இல்லை என அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்மணி தன்னை கண்ணகி நகர் பகுதிகளில் ஏழ்மையானவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கலாம் என கூறியுள்ளார். 

தீபா அங்கு சென்ற போது ஆரோக்கியதாஸ் நிஷாந்தி தம்பதியினரை பார்த்துள்ளனர். அவர்களது குழந்தை அவருக்கு பிடித்துள்ளது, அவர்களுக்கும் பத்தாண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதால், திட்டமிட்டு கடத்தியதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சென்னையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget