மேலும் அறிய

Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு

சென்னையில் நேற்று மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 5 ஆயிரத்து 20 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் நாளை மறுநாள் வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருவதற்கும், பணிகள் தொடர்பாக இ-பதிவுடன் வெளியில் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் விட்ட மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மாநகராட்சி பணியாளர்களும் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு

சென்னை மாகநர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கைசாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு இல்லாத வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் நேற்று மட்டும், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 5 ஆயிரத்து 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 653 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வானங்கள் என மொத்தம் 680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், அத்தியாசிய தேவையின்றி வெளியில் சுற்றியதற்காக ஆயிரத்து 44 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகுரக வாகனங்கள் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 1,078 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 142 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்டப்ப பகுதிகளில் நேற்று மட்டும் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 5 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆயிரத்து 758 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Breaking Tamil LIVE: நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
Sajeevan Sajana: கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mansoor Alikhan Hospitalized:  மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கைDayanidhi Maran vs EPS  ”EPS மீது அவதூறு வழக்கு! மன்னிப்பு கேட்கவே இல்ல” கொந்தளித்த தயாநிதி மாறன்Namakkal election 2024  : 7 கி.மீ தூரம்... EVM-ஐ தலையில் சுமந்த அதிகாரிகள்! காரணம் என்ன?Satyabrata sahoo : ’’தேர்தல் விதிகளை மீறினால்..’’ சத்யபிரதா சாகு எச்சரிக்கை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Breaking Tamil LIVE: நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
Sajeevan Sajana: கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த சஜீவன் சஜனா.. இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்!
Actor Kishore: ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
ஊழல் செய்பவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்ற பிரதமர் மோடி.. நக்கலாக பதிலளித்த நடிகர் கிஷோர்!
Devon Conway Ruled Out: காயம் காரணமாக விலகிய கான்வே.. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரை இணைத்துகொண்ட சிஎஸ்கே!
காயம் காரணமாக விலகிய கான்வே.. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரை இணைத்துகொண்ட சிஎஸ்கே!
Tamilnadu Election Voting : நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..
நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..
Google Layoff: இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் - 28 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் - 28 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்
Embed widget