மேலும் அறிய

Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு

சென்னையில் நேற்று மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 5 ஆயிரத்து 20 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் நாளை மறுநாள் வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருவதற்கும், பணிகள் தொடர்பாக இ-பதிவுடன் வெளியில் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் விட்ட மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மாநகராட்சி பணியாளர்களும் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு

சென்னை மாகநர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கைசாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு இல்லாத வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் நேற்று மட்டும், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 5 ஆயிரத்து 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 653 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வானங்கள் என மொத்தம் 680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், அத்தியாசிய தேவையின்றி வெளியில் சுற்றியதற்காக ஆயிரத்து 44 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகுரக வாகனங்கள் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 1,078 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 142 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்டப்ப பகுதிகளில் நேற்று மட்டும் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 5 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆயிரத்து 758 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
US Killed Leaders: சதாம் உசேன் முதல் கடாஃபி வரை.. அமெரிக்காவால் செத்த உலகத் தலைவர்கள்!
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!
Iran TV Anchor Cries: கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
Embed widget