மேலும் அறிய

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!

தென் மாவட்டங்களில் தொடர்ந்து ரசாயன மீன்கள் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை கரிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். மீன்கடைகளில் கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை சோதனையிட்ட போது, 500கிலோ மீன்கள் அழுகி, கெட்டுப்போய் இருந்ததும், மீன்களில் பார்மலின் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அதே போல் மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கக்கூடிய மொத்த மீன் மார்கெட்டில்  பல்வேறு மாநிலங்களிலிருந்து ரசாயானம் தடவப்பட்ட மீன்கள் கொண்டு வரப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நள்ளிரவு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை ஈடுபட்டனர். சோதனையின் போது ரசாயனம் கலக்கப்பட்ட 70 கிலோ மீன்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தொலை தூர ஊர்களில் இருந்து வரும் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயணம் தடவி பதப்படுத்தி விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் வந்தது.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன்கள் அதிக அளவில் விற்கப்படும் என்பதால், முதல் நாள் இரவே மதுரையில் இருந்து மீன்வள அதிகாரிகளை வரவழைத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி வாட்டர் டேங்க், கழனிவாசல் ரோடு, செக்காலை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த மீன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார். சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களும் சுமார் ஒரு கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரின் உதவியோடு உணவு பாது காப்புத்துறையினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
அதே போல் மதுரை ஆவின் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்துள்ளது. மதுரை  ஆவின் பால் பண்ணையில்  ஒரு கம்ப்ரெஸ்ஸர் இயந்திரம் பழுதடைந்த நிலையில், பழுது நீக்கமால், ஆவின் பசும்பால் என்றப் பெயரில் விற்கப்படும் பால், 50 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகள் முறையாக குளிரூட்டப் படாமல் விற்பனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  பால் வாங்கி காய்ச்சியோர் பால் திரிந்த நிலையில் அதிர்ச்சியடைந்தனர். பால் விநியோகம் செய்த பால் பூத் விற்பனையாளரைத் தொடர்பு கொண்ட போது சரியான பதில் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகளின் கவனக் குறைவால் பத்து லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...," தென் மாவட்டங்களில் தற்போது மீன்களில் இரசானம் தடவும் செயல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற தவறுகளை குறைக்க முடியும். ஆவின் நிலையத்தில் பால் கெட்டுப் போன விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளின் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுத்து இழப்பீடு தொகையை கட்டச் சொல்ல வேண்டும்” என்றார்.
 

தலைப்பு செய்திகள்

பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
DMK ELECTION PLAN: இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Embed widget