மேலும் அறிய

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!

தென் மாவட்டங்களில் தொடர்ந்து ரசாயன மீன்கள் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை கரிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். மீன்கடைகளில் கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை சோதனையிட்ட போது, 500கிலோ மீன்கள் அழுகி, கெட்டுப்போய் இருந்ததும், மீன்களில் பார்மலின் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அதே போல் மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கக்கூடிய மொத்த மீன் மார்கெட்டில்  பல்வேறு மாநிலங்களிலிருந்து ரசாயானம் தடவப்பட்ட மீன்கள் கொண்டு வரப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நள்ளிரவு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை ஈடுபட்டனர். சோதனையின் போது ரசாயனம் கலக்கப்பட்ட 70 கிலோ மீன்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தொலை தூர ஊர்களில் இருந்து வரும் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயணம் தடவி பதப்படுத்தி விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் வந்தது.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன்கள் அதிக அளவில் விற்கப்படும் என்பதால், முதல் நாள் இரவே மதுரையில் இருந்து மீன்வள அதிகாரிகளை வரவழைத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி வாட்டர் டேங்க், கழனிவாசல் ரோடு, செக்காலை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த மீன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார். சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களும் சுமார் ஒரு கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரின் உதவியோடு உணவு பாது காப்புத்துறையினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
அதே போல் மதுரை ஆவின் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்துள்ளது. மதுரை  ஆவின் பால் பண்ணையில்  ஒரு கம்ப்ரெஸ்ஸர் இயந்திரம் பழுதடைந்த நிலையில், பழுது நீக்கமால், ஆவின் பசும்பால் என்றப் பெயரில் விற்கப்படும் பால், 50 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகள் முறையாக குளிரூட்டப் படாமல் விற்பனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  பால் வாங்கி காய்ச்சியோர் பால் திரிந்த நிலையில் அதிர்ச்சியடைந்தனர். பால் விநியோகம் செய்த பால் பூத் விற்பனையாளரைத் தொடர்பு கொண்ட போது சரியான பதில் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகளின் கவனக் குறைவால் பத்து லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...," தென் மாவட்டங்களில் தற்போது மீன்களில் இரசானம் தடவும் செயல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற தவறுகளை குறைக்க முடியும். ஆவின் நிலையத்தில் பால் கெட்டுப் போன விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளின் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுத்து இழப்பீடு தொகையை கட்டச் சொல்ல வேண்டும்” என்றார்.
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
Embed widget