மேலும் அறிய

எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!

பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ‘பிராத்மிக் சிக்‌ஷா வர்க்’ என்ற பெயரில் சாகா பயிற்சியை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி மாணவர்களிடம் மதவெறியை தூண்டும் எனக்கூறி, இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி  தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். இந்த எதிர்ப்புகளையும் மீறி அப்பள்ளியில் திட்டமிட்டபடி சாகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் அப்பள்ளி முன்பாக தபெதிக, திவிக, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.


எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!

இந்த நிலையில் நேற்று ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!

இதனிடையே போராட்டத்திற்கு முன்பாக பள்ளி முன்பாக நின்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரை பள்ளிக்குள் செல்லுமாறு, துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் காவல் துறை அதிகாரிகளை பள்ளிக்குள் செல்ல விடாமலும், பணி செய்ய விடாமலும் தடுத்த இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த  காளிதாஸ், இந்து முன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அருண், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget