மேலும் அறிய

எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!

பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ‘பிராத்மிக் சிக்‌ஷா வர்க்’ என்ற பெயரில் சாகா பயிற்சியை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி மாணவர்களிடம் மதவெறியை தூண்டும் எனக்கூறி, இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி  தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். இந்த எதிர்ப்புகளையும் மீறி அப்பள்ளியில் திட்டமிட்டபடி சாகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் அப்பள்ளி முன்பாக தபெதிக, திவிக, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.


எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!

இந்த நிலையில் நேற்று ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!

இதனிடையே போராட்டத்திற்கு முன்பாக பள்ளி முன்பாக நின்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரை பள்ளிக்குள் செல்லுமாறு, துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் காவல் துறை அதிகாரிகளை பள்ளிக்குள் செல்ல விடாமலும், பணி செய்ய விடாமலும் தடுத்த இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த  காளிதாஸ், இந்து முன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அருண், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget