மேலும் அறிய

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தனியார் வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் திட்டை தடுத்த போது கையில் வைத்திருந்த திருப்புளியால் குத்திவிட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து பிரதாப் தப்பிச் சென்றுவிட்டான்

திருவாரூர் அருகே நடந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்தவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
 
திருவாரூர் மாவட்டம் கூடூர் பகுதியில் தமிழரசன் என்பவருக்குச் சொந்தமான லட்சுமி காம்ப்ளக்ஸ் என்கிற தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. காம்ப்ளக்ஸுக்கு பின்புறம் தமிழரசன் தனது வீட்டில் வசித்து வந்தார். அந்த தனியார் வணிக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏடிஎம் மையத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
 
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூன்று இளைஞர்கள் அங்கிருந்து தப்பிக்க புள்ளமங்கலம் பகுதியை சேர்ந்த 19 வயதான மதன் என்கிற இளைஞன் மட்டும் சிக்கிக் கொண்டான். அவனை காப்பாற்ற தப்பிச் சென்ற மற்றொரு கூட்டாளியான 20 வயதான பிரதாப் தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தபோது தனியார் வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் அவனை தடுத்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த திருப்புளியால் தமிழரசனை குத்திவிட்டு அங்கிருந்து பிரதாப் தப்பிச் சென்றுவிட்டான். இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
 
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் 12 மணி நேரத்திற்குள் புள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், விஜய், பிரதாப், ஆகாஷ் ஆகிய 4 குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
 
ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வெல்டிங் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர் அதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏடிஎம் மையத்திற்கு எதிரே உள்ள வெல்டிங் பட்டறையில் இருந்து எரிவாயு சிலிண்டர் காணாமல் போயுள்ளதாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவன் என பெயர்பெற்ற திருவாரூர் சீராதோப்பு முருகனிடம் நான்கு இளைஞர்களும் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
 
நான்கு குற்றவாளிகளும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளி வராதவாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்... ரூ.50 ஆயிரம் லஞ்ச விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!
முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்... ரூ.50 ஆயிரம் லஞ்ச விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!
வங்கக்கடல் வழியே இலங்கைக்கே கடத்த மெகா திட்டம்.. காரைக்காலில் சிக்கிய போதைப்பொருள் மன்னன் பாக்யராஜ்!
வங்கக்கடல் வழியே இலங்கைக்கே கடத்த மெகா திட்டம்.. காரைக்காலில் சிக்கிய போதைப்பொருள் மன்னன் பாக்யராஜ்!
தீராத உடல்நல பிரச்னை.. பில்லி சூனியம் வைத்ததாக மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார்!
தீராத உடல்நல பிரச்னை.. பில்லி சூனியம் வைத்ததாக மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார்!
கதறும் 70 வயது மூதாட்டி.. கண்டுகொள்ளாத காவல்துறை? சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்!
கதறும் 70 வயது மூதாட்டி.. கண்டுகொள்ளாத காவல்துறை? சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Victoris CNG on EMI: சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Embed widget