மேலும் அறிய

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தனியார் வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் திட்டை தடுத்த போது கையில் வைத்திருந்த திருப்புளியால் குத்திவிட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து பிரதாப் தப்பிச் சென்றுவிட்டான்

திருவாரூர் அருகே நடந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்தவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
 
திருவாரூர் மாவட்டம் கூடூர் பகுதியில் தமிழரசன் என்பவருக்குச் சொந்தமான லட்சுமி காம்ப்ளக்ஸ் என்கிற தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. காம்ப்ளக்ஸுக்கு பின்புறம் தமிழரசன் தனது வீட்டில் வசித்து வந்தார். அந்த தனியார் வணிக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏடிஎம் மையத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
 
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூன்று இளைஞர்கள் அங்கிருந்து தப்பிக்க புள்ளமங்கலம் பகுதியை சேர்ந்த 19 வயதான மதன் என்கிற இளைஞன் மட்டும் சிக்கிக் கொண்டான். அவனை காப்பாற்ற தப்பிச் சென்ற மற்றொரு கூட்டாளியான 20 வயதான பிரதாப் தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தபோது தனியார் வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் அவனை தடுத்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த திருப்புளியால் தமிழரசனை குத்திவிட்டு அங்கிருந்து பிரதாப் தப்பிச் சென்றுவிட்டான். இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
 
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் 12 மணி நேரத்திற்குள் புள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், விஜய், பிரதாப், ஆகாஷ் ஆகிய 4 குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
 
ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வெல்டிங் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர் அதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏடிஎம் மையத்திற்கு எதிரே உள்ள வெல்டிங் பட்டறையில் இருந்து எரிவாயு சிலிண்டர் காணாமல் போயுள்ளதாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவன் என பெயர்பெற்ற திருவாரூர் சீராதோப்பு முருகனிடம் நான்கு இளைஞர்களும் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்றவரை கொன்ற 4 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
 
நான்கு குற்றவாளிகளும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளி வராதவாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget