மேலும் அறிய

மயிலாடுதுறையில் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்  - காரணம் இதுதான்..!

இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கில் நீண்டகாலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டும் பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இரண்டு இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் தாக்கி, அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்த வழக்கில், அப்போதைய மயிலாடுதுறை காவல்நிலைய காவல் ஆய்வாளர் சிங்காரவேலுவுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நாகூர் காவல் நிலையத்தில் தற்போது ஆய்வாளராகப் பணிபுரியும் சிங்காரவேலு, நீண்டகாலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாததாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிவாரண்டின் பின்னணி

கடந்த 2019-ஆம் ஆண்டு, பிரவீன்பாபு மற்றும் அசோக் ஆகிய இரண்டு இளைஞர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் அவருடன் இருந்த மேலும் மூன்று காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இருவரின் கைகளும் உடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நீதிமன்றப் போராட்டமும் நிவாரணமும்

காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களின் விடாமுயற்சியால், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் ஆணையம், சம்பந்தப்பட்ட நான்கு காவலர்களிடமிருந்தும் தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிவாரணமாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. இந்த நிவாரணத் தொகையும் அவர்களுக்குப் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

 

வழக்கின் தற்போதைய நிலை

இந்த வழக்கு மயிலாடுதுறை கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்களும் வழக்கமான விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். ஆனால், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அப்போதைய காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, பலமுறை வாய்தாக்கள் அனுப்பப்பட்டும் நீண்டகாலமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த குற்றவியல் நடுவர் நீதிபதி உம்முல் பரிதா, சிங்காரவேலுவுக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

பிடிவாரண்ட் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட தேதிக்குள் சிங்காரவேலு நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. இது காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், காவல்துறை மீது ஏற்பட்ட அவநம்பிக்கையை இந்த வழக்கு இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

 

சமூகத்தில் எதிரொலிப்பு

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, அப்பாவி இளைஞர்களைத் தாக்கி, அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம், காவல்துறையின் நம்பகத்தன்மை குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆய்வாளர் சிங்காரவேலு ஆஜர் ஆகுவாரா? அல்லது கைது செய்யப்படுவாரா ?என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!
Embed widget