மேலும் அறிய

‛டீமில் கருப்பு ஆடு... ஆப்ரேஷன் எல்லாம் ஃபெய்லியர்...’ உயர் அதிகாரிகளிடம் முறையிடும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை!

‛உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஸ்பெஷல் டீமை கட்டுப்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ரவுடிகள் தலை தூக்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும், தொழில் நிறுவனங்கள் நிம்மதியாக பணியாற்ற முடியும்’

சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், ரவுடியிசம் கொடி கட்டி பறந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 


‛டீமில் கருப்பு ஆடு... ஆப்ரேஷன் எல்லாம் ஃபெய்லியர்...’ உயர் அதிகாரிகளிடம் முறையிடும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை!

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையின் நியமனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கிக் கொண்டிருந்த ரவுடிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. நினைத்ததைப் போலவே, அவரும் களத்தில் இறங்கி ரவுடிகளை  விரட்டத் தொடங்கினர். படப்பை குணா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கு வலை வீசப்பட்ட நிலையில் குணா உள்ளிட்ட பலரும் அதில் பிடிபட்டனர். கைதானவர்கள், சரணடைந்தவர்கள் என அனைவரும் சிறையில் இருக்கும் நிலையில், படப்பை குணாவின் உறவினரான போந்தூர் மோகனை பிடிக்க வெள்ளத்துரை விரித்த வியூகம் அனைத்தும் எடுபடவில்லை. 

வெள்ளத்துரைக்கு உதவியாக அமைக்கப்பட்ட ஸ்பெஷல் டீமில் இருந்து, போந்தூர் மோகனுக்கு அனைத்து நகர்வுகளும் பகிரப்படுகிறதாம். 5 முறை சரியான தகவல் கிடைத்தும், கிட்ட நெருங்கியும், போந்தூர் மோகனை வெள்ளத்துரையால் கைது செய்ய முடியவில்லையாம். அதன் பின்னணியில், ஸ்பெஷல் டீமில் உள்ள சில போலீசாரின் சாதிய பற்றும், மோகனிடம் இருக்கும் நெருக்கமும் தான், போந்தூர் மோகனை பிடிக்க வெள்ளத்துரை போட்ட அத்தனை ஆபரேஷனும் பெயிலியர் ஆக காரணமாம். 

இதனால் நொந்து போன வெள்ளத்துரை, தனது அணியில் உள்ள கருப்பு ஆடுகளை நீக்கி விட்டு, வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பான அதிகாரிகள் மூலம் அணியை கட்டமைக்க கோரிக்கை வைத்துள்ளார். துவக்கத்தில் பரபரப்பாக இருந்த தேடுதல் வேட்டை, பின்னாளில் சோர்ந்து விட்டதாகவும், கைதாகும் ரவுடிகள் மீது கறார் நடவடிக்கை எதுவும் இல்லாததால், அவர்கள் திரும்ப வந்து தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார்கள் என்ற பயத்தில், ‛இன்பார்மர்கள்’ ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விசயத்தையும் வெள்ளத்துரை, உயர்அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஸ்பெஷல் டீமை கட்டுப்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ரவுடிகள் தலை தூக்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும், தொழில் நிறுவனங்கள் நிம்மதியாக பணியாற்ற முடியும் என்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இரும்பு கரம் கொண்டு அடக்கும் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும், அப்போது தான் மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்றும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சார்பில், உயர்அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget