மேலும் அறிய

New Loan Rules: வங்கிகளில் கடன் வாங்க திட்டமா? திடீரென விதிகளை மாற்றிய ஆர்பிஐ - அக்டோபர் 1 முதல் அமல்

New Loan Rules: வங்கிகளில் கடன் வாங்குவதற்கான விதிகளை திருத்தி, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

New Loan Rules: வங்கிகளில் கடன் வாங்குவதற்கான திருத்தப்பட்ட விதிகள், அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கடன்களுக்கான விதிகள் மாற்றம்:

அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இந்திய வங்கிகளில் நீங்கள் கடன் வாங்கினால், புதிய விதிகளின்படியே கடன் கிடைக்கும்.  ஆனால் இந்த விதிகள் குறிப்பிட்ட வகை கடன்களில் மட்டுமே பொருந்தும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  ”வங்கிகள் மற்றும் NBFCகளுக்கான சில்லறை மற்றும் MSME கடன்களுக்கான விதிகள் அக்டோபர் 1 முதல் மாறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் அனைத்து நிதி நிறுவனங்களின் தயாரிப்புகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன்கள் குறித்த முழுமையான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

கடன்களுக்கான விதி திருத்தங்கள் என்ன?

புதிய விதிகளின்படி,

  • கடன் வாங்குபவர்களுக்கு வங்கிகள் வட்டி மற்றும் இதர செலவுகள் உட்பட கடன் ஒப்பந்தம் குறித்த அனைத்து தகவல்களையும் (கேஎஃப்எஸ்) வழங்க வேண்டும்
  • வணிக வங்கிகள் குறிப்பாக தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் கடன் ஒப்பந்தங்கள், ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் யூனிட்களின் டிஜிட்டல் கடன்கள் மற்றும் சிறிய தொகை கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

விரைந்து புதிய விதிகளை அமல்படுத்தவும்:

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களும் (RE) வழங்கும் சில்லறை மற்றும் MSME கால கடன்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும். KFS என்பது எளிய மொழியில் கடன் ஒப்பந்தத்தின் முக்கிய உண்மைகளின் விளக்கமாகும். இதன் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு சரியான தகவல் கிடைக்கும். இந்த வழிகாட்டுதல்களை விரைவில் நடைமுறைப்படுத்த நிதி நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் விதிகள் அமல்:

அக்டோபர் 1, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட அனைத்து புதிய சில்லறை மற்றும் MSME காலக் கடன்களுக்கும் புதிய வழிகாட்டுதல்கள் கட்டாயமாகும். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய கடன்களும் இதில் அடங்கும். மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் சார்பாக கடன் பெறும் நிறுவனங்களிலிருந்து வசூலிக்கப்படும்,  காப்பீடு மற்றும் சட்டக் கட்டணம் போன்ற தொகைகளும் வருடாந்திர சதவீத விகிதத்தின் (APR) பகுதியாக இருக்கும் என்று RBI தெரிவித்துள்ளது.

கடன் வாங்குபவரின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கப்படாது:

மேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்களை வசூலிக்கும்போது, ரசீதுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் ஒவ்வொரு கட்டணத்திற்கும் நியாயமான நேரத்திற்குள் கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், KFS இல் குறிப்பிடப்படாத எந்தவொரு கட்டணத்தையும் கடனாளியின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் கடனின் காலத்தின் போது எந்த நிலையிலும் வசூலிக்க முடியாது. இருப்பினும், கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை, பெறப்பட்ட தொகை தொடர்பான விதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
Embed widget