Budget 2025: முதன் முதலில் பட்ஜெட் தாக்கல் நாடு எது தெரியுமா? முழு விவரம்
Budget 2025 : மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். உலகின் முதல் பட்ஜெட்டை எந்த நாடு தாக்கல் செய்தது, எப்படி தொடங்கியது தெரியுமா?

உலகில் முதல் பட்ஜெட் எங்கு தாக்கல் செய்யப்பட்டது, இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது, இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான செயல்முறை என்ன? என்பதை இந்த தொகுப்பில் காண்போம்
பட்ஜெட் 2025:
பிப்ரவரி 1, 2025 அன்று நாட்டின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். அவரது பட்ஜெட் உரை காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட் உரை இதுவாகும். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில், நிதியமைச்சகத்தின் ஹல்வா விழாவிற்குப் பிறகு, பட்ஜெட்டின் பூட்டு செயல்முறையும் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பட்ஜெட் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் பட்ஜெட்: Budget 2025: மாத சம்பளம் வாங்குவோரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு என்ன?
ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர், மேலும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முதல் பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் என்ற சொல் லத்தீன் வார்த்தையான 'புல்கா' என்பதிலிருந்து வந்தது. பிரெஞ்சு மொழியில் இது buget என்றும் அழைக்கப்பட்டது. இந்த வார்த்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டபோது, அது போகட் ஆனது, இது பின்னர் பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. இப்போது நமது முக்கிய கேள்விக்கு வருவோம். உலக அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது இங்கிலாந்து பெயர்தான் முதலில் வரும். இது இங்கிருந்து தொடங்கியது. 1760-ம் ஆண்டு முதல் முறையாக ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து பட்ஜெட் மற்ற நாடுகளுக்குச் சென்றது, அது ஒவ்வொறு அரசாங்கமும் பட்ஜெட்டை சமர்ப்பிக்கத் தொடங்கியது.
இதையும் பட்ஜெட்:Budget 2025 Expectations: டார்கெட் சீனாவோ, பாகிஸ்தானோ இல்லை..! பாதுகாப்பு துறையின் எதிர்பார்ப்பு - பட்ஜெட் 2025
இந்தியாவில் எப்போது முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
இந்தியாவில் பட்ஜெட் போடுவது சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, நாட்டின் நிதி அமைப்பை மேம்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்சனை இந்தியாவுக்கு அழைத்தனர். அவர் ஏப்ரல் 7, 1860 அன்று இந்தியாவின் முதல் யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.
இவ்வாறாக தான் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
ட்ரெண்டிங் செய்திகள்






















