மேலும் அறிய

World Water Day: உலக தண்ணீர் தினம்; மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் ஒருங்கிணைந்து தண்ணீர் சேமிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

"நீரின்றி அமையாது உலகு “ என்ற வள்ளுவனின் கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இந்த பூமியில் வாழும் அத்தனை உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது. குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது பூமி. இது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்கியுள்ளது.  இதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினத்தை  கடைப்பிடிக்கின்றனர்.
 

அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், இயற்கை வளங்களை சுரண்டல், தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைதான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. சில நாடுகளில் முன் கூட்டியே மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறையை விரைவாகவே துவங்கிவிட்டனர். இன்று மார்ச் 22 ஆம் தேதி தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி:

கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில்  உலகம் முழுவதும் தண்ணீர் தினம் கடைப்பிடிப்பது பற்றிய  யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று  தண்ணீர் தினம் என்ற  தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது நன்னீர் மற்றும் இந்த குறிப்பிடத்தக்க வளத்தின் நிலையான மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மதுரையில் யங் இந்தியா சமூக அமைப்பு, எல்.டி.சி., கல்லூரியோடு இணைந்து 5 ஆயிரம் நபர்களை கொண்டு தண்ணீர் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.


World Water Day: உலக தண்ணீர் தினம்; மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி
 யங் இந்தியா சமூக அமைப்பு  மதுரையில் சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு விசயங்களை முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.   இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சேமிப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை எல்.டி.சி., கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தனர். பெரிய அரங்கில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 5 ஆயிரம் நபர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக கையெழுத்து இயக்கத்தையும் துவங்கி வைத்தனர். தண்ணீர் தேவையை உணர்ந்து செயல்படவேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தினர்.

World Water Day: உலக தண்ணீர் தினம்; மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி
 
இது குறித்து யங் இந்தியா க்ளைமேட் சேஞ் அமைப்பை சேர்ந்த பொன்.குமார் கூறுகையில்...," நாள் தோறும் நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் அதிகளவு தண்ணீரை தேவையற்று செலவு செய்கிறோம். தண்ணீர் சிக்கனம் என்பது குறைந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில்லை. தேவையான விசயங்களுக்கு தேவையான அளவு பயன்படுத்த வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

World Water Day: உலக தண்ணீர் தினம்; மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி
விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம் எப்படி தேவைக்கு ஏற்ப தருகிறதோ அதைப் போல் இருக்க வேண்டும். இப்படி தேவைகளை அறித்து இடத்திற்கு தகுந்தார் போல் தண்ணீரை செலவு செய்ய வேண்டும். தண்ணீர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். 5 ஆயிரம் நபர்கள் இங்கு உறுதி மொழி ஏற்றது மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கின்னஸ் விருதிற்கு பரிந்துரை செய்வோம்" எனவும் தெரிவித்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு,  தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு, தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Top 10 News Headlines: அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு,  தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
Shubman Gill: பிராட் மேனாமே.. 100 ஆண்டுகால காத்திருப்பு, தட்டி தூக்க ரெடியான கேப்டன் கில் - லிஸ்ட் என்ன?
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
CBE Bomb Blast Case: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Top 10 News Headlines: அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Train Accident: உயிர் போனாதான் வேலை செய்வீங்களா? ரயில்வே கேட்களில் புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் உத்தரவு
Car Fuel City Traffic: சிட்டி ட்ராபிக்கிற்கு எது கரெக்டா இருக்கும்? பெட்ரோலா? டீசலா? EV Vs சிஎன்ஜி - செலவு குறையுமா?
Car Fuel City Traffic: சிட்டி ட்ராபிக்கிற்கு எது கரெக்டா இருக்கும்? பெட்ரோலா? டீசலா? EV Vs சிஎன்ஜி - செலவு குறையுமா?
Tamilnadu Roundup 10.07.2025: இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி, முதல்வருக்கு திமிழிசை கேள்வி, கடலூர் ரயில் விபத்து பகுதியில் ஆய்வு-10 மணி செய்திகள்
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
IND Vs ENG Lords Test: ஆர்ச்சர் Vs பும்ரா - 3வது டெஸ்டில் இங்கி., வதைக்குமா இந்தியா? லார்ட்ஸில் மிரட்டலான ஆடுகளம்?
Embed widget