நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
Christmas and New Year Special Bus: பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. இதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் விடுமுறை- சிறப்பு பேருந்து
அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை 23/12/2025 (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 24/12/2025 (புதன் கிழமை), 25/12/2025 (வியாழக்கிழமை கிறிஸ்துமஸ்] பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர பகுதிகளில் இருந்தும் மற்றும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எனவே வழக்கம் போல் இயக்கப்படும் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து
அந்த வகையில், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கணணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/12/2025 மற்றும் 24/12/2025 ஆகிய தேதிகளில் மொத்தம் 91 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 23/12/2025 (செவ்வாய்கிழமை) அன்று 255 பேருந்துகளும். நாளை மறுநாள் 24/12/2025 (புதன் கிழமை) 525 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல் மாதாவாத்திலிருந்து நாளை 23/12/2025 மற்றும் நாளை மறுநாள் 24/12/2025 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை முடிவடைந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்பும் பயணிகளுகாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில், நாளைய தினம் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்ய 20,107 பயணிகளும், 24/12/2025 புதன்கிழமை 21,206 பயணிகளும், 26/12/2025 வெள்ளிக்கிழமை 7,578 பயணிகளும் 27/12/2025 சனிக்கிழமை 5,972 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு செய்து பயணம் செய்யுங்கள்
இதே போல 28/12/2025 ஞாயிறு 14,256 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க தொலைதூர சம உள்ளதால் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட நெரிசலைதவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















