மேலும் அறிய

அதிக விளைச்சலை தரக்கூடிய மக்காச்சோளம் விதைகளை வழங்க வேண்டும் - தூத்துக்குடி விவசாயிகள்

ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், 2-ம் கட்ட விதைப்புக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அரசு தற்போது போதுமான அளவு டி.ஏ.பி. இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதூர் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்டம் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.


அதிக விளைச்சலை தரக்கூடிய  மக்காச்சோளம் விதைகளை  வழங்க வேண்டும் -  தூத்துக்குடி விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதியான விளாத்திகுளம், கோவில்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மானாவாரி நிலங்களே அதிகமாக உள்ளன. வானம் பார்த்த பூமியான இங்கு மழையை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ராபி பருவ விதைப்பு பணியை விவசாயிகள் ஆடி 18-ம் பெருக்கு அன்று தொடங்குவது வழக்கம்.

இந்தாண்டு ஆடி 18-ம் பெருக்கான புதூர் பகுதி விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் முதற்கட்டமாக நிலக்கடலை விதைப்பு பணியை தொடங்கினர். முன்னதாக நிலத்துக்கு பூகைளை செய்து, இந்தாண்டு போதிய அளவு மழை பெய்து, நல்ல மகசூல் கிடைக்க வேண்டினர். தொடர்ந்து, டிராக்டர் மூலம் நிலக்கடலை விதைப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஊடு பயிராக தட்டப்பயறு விதை தூவப்பட்டது. நிலக்கடலைக்கு மழை அதிகம் தேவைப்படாது. இருந்தாலும், கடந்த மாதம் இறுதி முதல் அவ்வப்போது மழை பெய்து வருவது நிலக்கடலைக்கு கூடுதல் பலமாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.


அதிக விளைச்சலை தரக்கூடிய  மக்காச்சோளம் விதைகளை  வழங்க வேண்டும் -  தூத்துக்குடி விவசாயிகள்

மேலும், பயிரிடுவதற்கு முன் அடியூரமாக டி.ஏ.பி. 50 கிலோ பயன்படுத்துவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக டி.ஏ.பி. உரத்துக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்தாண்டாவது போதுமான அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


அதிக விளைச்சலை தரக்கூடிய  மக்காச்சோளம் விதைகளை  வழங்க வேண்டும் -  தூத்துக்குடி விவசாயிகள்

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, முதற்கட்டமாக நிலக்கடலை பயிரிடும் பணிகள் தொடங்கி உள்ளன. 2-ம் கட்டமாக புரட்டாசி மாத தொடக்கத்தில் சிறு தானியங்களான சோளம், மக்காச்சோளம், கம்பு, பயறு வகைகளான உளுந்து, பாசி மற்றும் பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர் செய்வதற்கு நிலங்களை உழுது, பண்படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக கடும் மழையால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு விவசாயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், 2-ம் கட்ட விதைப்புக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அரசு தற்போது போதுமான அளவு டி.ஏ.பி. இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், இந்தாண்டு வேளாண் விரிவாக்க மையங்களில் வழியாக மக்காச்சோளம் விதை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வந்துள்ளது. நல்ல தரமான விதைகள் அதிக விளைச்சலை தரக்கூடிய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget