மேலும் அறிய

கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள்

தஞ்சாவூர்: கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை வளமான உரமாக மாற்றுவதன் மூலம் வளிமண்டல மாசுபாடு, மண்ணின் வளம் சரி செய்யப்பட்டு பல நன்மைகளை அளிக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி திறன் அதிகரித்து மண்ணின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. எனவே இயற்கை உரம் தயாரிக்க முன்வர வேண்டும் என தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் (பொ) ஈஸ்வர் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இயற்கையாகவே கழிவுகளானது நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டோ அல்லது மக்கப்பட்டோ உருவானால் அது மக்கும் உரம். பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், உள்ளாட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மூலம் ஏராளமான இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உரம் மண்ணில் உள்ள கரிம பொருள்களின் அளவை அதிகரிக்கிறது. இது மண்ணின் உயிரினங்கள், மண்ணின் அமைப்பு, ஊடுருவல், நீர் வைப்புத் திறன் மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றில் சாதகமான விளைவை உருவாக்குகிறது. உரத்தில் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் மூலம் நோய்கள், பூச்சிகள், களை விதைகள் அழிக்கப்படுகிறது. ஏனெனில் உரக்குவியலில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் அவை உயிர் வாழ முடியாது.


கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள்

 

இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள்:

பாரம்பரிய முறைகள்
குழி முறை
குவியல் முறை

மேம்படுத்தப்பட்ட முறைகள்:

இந்தூர் முறை, நாடெப் முறை, தென்னை நார் கழிவு உரம், பண்ணை கழிவுகளை மக்க வைக்கும் முறை

மேம்படுத்தப்பட்ட உரம் தயாரிக்கும் முறைகள்

பெரும்பாலான முறைகளில் உரம் தயாரிப்பதற்கு 100-180 நாட்கள் ஆகும். எனவே உரம் தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரம் தயாரிப்பாளர்கள் தற்போது மக்கும் பொருளை விரைவாக சிதைப்பதற்கும், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை குறைப்பதற்கும் திறன்மிகு நுண்ணுயிரிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நுண்ணுயிர் கலவை வெவ்வேறு வணிகப்பெயர்களில் விற்கப்படுகிறது. அவை விலை உயர்ந்தவை மற்றும் குறைந்த தரமுடையதாகும். தற்போது அரசு நிறுவனங்கள், தனிமைப்படுத்தப்பட்ட திறன்மிகு வேஸ்ட் டீகம்போசர் மற்றும் பயோ மினரல்ஸ் உற்பத்தி செய்து அவற்றை மேலும் பெருக்கி உரம் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்தூர் முறை

இந்த முறை இந்தியாவில் உரம் தயாரிப்பதற்கான முதல் விஞ்ஞான முயற்சியாகும். இந்த முறையில் கழிவு பொருட்களை சாணம் அல்லது மனித கழிவுகளால் பரப்பி ஈரப்படுத்தப்படுகிறது. குழியின் அளவு நீளம் 4- 6 மீட்டர், அகலம் ஒரு மீட்டர், உயரம் 1 மீட்டர் உடையதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களை அடுக்கு மூலம் குழியில் நிரப்பப்படுகிறது, 15 நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை கிளறி விட வேண்டும் போதுமான காற்றோட்டம் தரும்போது நுண்ணுயிரிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. உரம் 3, 4 மாதங்களில் தயாராகிவிடுகிறது.

நாடெப் முறை:

இந்த முறையில் குறைந்த அளவு கால்நடை சாணம் பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ மாட்டு சாணத்தில் இருந்து 40 கிலோ உரம் தயாரிக்கலாம். 100 டன் உரம் தயாரிக்க ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒரு பசுவின் சாணம் போதுமானது. மண்ணின் மேற்பரப்பில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு தொட்டியில் உரம் தயாரிக்கப்படுகிறது.

உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு 15 சென்டிமீட்டர் அளவு இடைவெளியுடன் 9 அடுக்கில் இந்த தொட்டி கட்டப்படுகிறது இவ்வாறு அமைப்பதால் காற்றின் சுழற்சி நன்கு இருக்கும். சுவர் சாணத்தால் பூசப்பட்டிருக்க வேண்டும். கழிவு பொருட்கள் அடுக்கு மூலம் தொட்டியில் நிரப்பப்படுகிறது. முதல் அடுக்கு பயிர் கழிவுகள், களைகள் புல் போன்றவை 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த அடுக்கிற்கு மேல் 125 லிட்டர் தண்ணீரில் மாட்டு சாணத்தை கொண்டு தயாரித்த கரைசலை மெல்லிய அடுக்கு வடிவில் பரப்பப்படுகிறது. இந்த அடுக்குகள் செங்கல் மட்டத்திலிருந்து 0.6 முதல் 0.75 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும்.
 
தொட்டியை அதன் முழு கொள்ளளவில் நிரப்ப 11- 12 அடுக்குகள் தேவை. ரெண்டு நாட்களில் கழிவுகளை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் குவியல்களில் வாயு கசிவு ஏற்படக் கூடாது.

20 நாட்களுக்குப் பிறகு குப்பை அமிழ்ந்த பிறகு 9 அங்குலங்கள் தொட்டியில் இறங்கி அதே முறையில் நிரப்பப்பட்டு மீண்டும் மண் மற்றும் சாணத்தை கொண்டு மூட வேண்டும். 160 - 175 கன அடி உயரம் மற்றும் 40- 50 கன அடி அளவு கழிவு பொருட்களில் இருந்து சுமார் மூன்று டன் எடையுள்ள உரம் பெறப்படுகிறது. ஒரு பசுவில் இருந்து ஒரு வருடத்தில் சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து 80 டன் உரம் தயாரிக்கலாம் இதில் 100 கிலோ தழைச்சத்து, 560 கிலோ மணிச்சத்து மற்றும் 140 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும். ஒரு தொட்டியை உருவாக்க ரூபாய் ஆயிரம் செலவாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Farmers Scheme: ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு
ரொம்ப ரொம்ப கம்மியான வாடகை.! விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட் - வேளாண்மை துறை அசத்தல் அறிவிப்பு
இடர்பாடுகளை தாண்டி மும்முரம் அடைந்துள்ள சம்பா, தாளடி அறுவடை... ஆலக்குடி பகுதியில் விறுவிறுப்பு
இடர்பாடுகளை தாண்டி மும்முரம் அடைந்துள்ள சம்பா, தாளடி அறுவடை... ஆலக்குடி பகுதியில் விறுவிறுப்பு
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
Madurai ; சிறு தானிய திருவிழா: ஆட்சியரின் அழைப்பு.. ஆரோக்கிய வாழ்வுக்கு வழி - மானியங்கள், புதிய வாய்ப்புகள்!
Madurai ; சிறு தானிய திருவிழா: ஆட்சியரின் அழைப்பு.. ஆரோக்கிய வாழ்வுக்கு வழி - மானியங்கள், புதிய வாய்ப்புகள்!
ABP Premium

வீடியோ

Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voters List: இறுதிவாக்காளர் பட்டியல் ரிலீஸ்! தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் - SIR-ஆல் இத்தனை லட்சம் பேர் நீக்கமா?
TN Voters List: இறுதிவாக்காளர் பட்டியல் ரிலீஸ்! தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் - SIR-ஆல் இத்தனை லட்சம் பேர் நீக்கமா?
TVK Vijay Election Promise: நான் முதலமைச்சரானால்! - தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்!
TVK Vijay Election Promise: நான் முதலமைச்சரானால்! - தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்!
Parijatham Serial: வேண்டா வெறுப்பாக ஹனிமூன் செல்லும் விஷால்.. சதி செய்ய ஜாலியாக செல்லும் ஸ்ரீஜா!
Parijatham Serial: வேண்டா வெறுப்பாக ஹனிமூன் செல்லும் விஷால்.. சதி செய்ய ஜாலியாக செல்லும் ஸ்ரீஜா!
TN Voters List: இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ்..! A to Z..! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் உள்ளே!
TN Voters List: இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ்..! A to Z..! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் உள்ளே!
AI Car Technology: எல்லாம் AI மயம்.! இனி கார்களும் மொபைல் போன் போல் OTA-வில் அப்டேட் ஆகும்; டாடாவின் அசத்தல் பிளான்
எல்லாம் AI மயம்.! இனி கார்களும் மொபைல் போன் போல் OTA-வில் அப்டேட் ஆகும்; டாடாவின் அசத்தல் பிளான்
TVK Vijay: ”அதிமுக-காரங்க காமெடி பண்ணாதிங்கயா” வீணாய் குறுக்கே வருவதாக விஜய் விமர்சனம் - வேலூர் பேச்சு
TVK Vijay: ”அதிமுக-காரங்க காமெடி பண்ணாதிங்கயா” வீணாய் குறுக்கே வருவதாக விஜய் விமர்சனம் - வேலூர் பேச்சு
TVK Vijay Kutty Story: சின்னப் பையனும் முரட்டுக் காளையும்; தவெக விஜய் சொன்ன தாறுமாறு குட்டிக்கதை! அரசியல் வியூகமா?
TVK Vijay Kutty Story: சின்னப் பையனும் முரட்டுக் காளையும்; தவெக விஜய் சொன்ன தாறுமாறு குட்டிக்கதை! அரசியல் வியூகமா?
Embed widget