மேலும் அறிய

கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள்

தஞ்சாவூர்: கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை வளமான உரமாக மாற்றுவதன் மூலம் வளிமண்டல மாசுபாடு, மண்ணின் வளம் சரி செய்யப்பட்டு பல நன்மைகளை அளிக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி திறன் அதிகரித்து மண்ணின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. எனவே இயற்கை உரம் தயாரிக்க முன்வர வேண்டும் என தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் (பொ) ஈஸ்வர் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இயற்கையாகவே கழிவுகளானது நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டோ அல்லது மக்கப்பட்டோ உருவானால் அது மக்கும் உரம். பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், உள்ளாட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மூலம் ஏராளமான இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உரம் மண்ணில் உள்ள கரிம பொருள்களின் அளவை அதிகரிக்கிறது. இது மண்ணின் உயிரினங்கள், மண்ணின் அமைப்பு, ஊடுருவல், நீர் வைப்புத் திறன் மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றில் சாதகமான விளைவை உருவாக்குகிறது. உரத்தில் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் மூலம் நோய்கள், பூச்சிகள், களை விதைகள் அழிக்கப்படுகிறது. ஏனெனில் உரக்குவியலில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் அவை உயிர் வாழ முடியாது.


கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள்

 

இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள்:

பாரம்பரிய முறைகள்
குழி முறை
குவியல் முறை

மேம்படுத்தப்பட்ட முறைகள்:

இந்தூர் முறை, நாடெப் முறை, தென்னை நார் கழிவு உரம், பண்ணை கழிவுகளை மக்க வைக்கும் முறை

மேம்படுத்தப்பட்ட உரம் தயாரிக்கும் முறைகள்

பெரும்பாலான முறைகளில் உரம் தயாரிப்பதற்கு 100-180 நாட்கள் ஆகும். எனவே உரம் தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரம் தயாரிப்பாளர்கள் தற்போது மக்கும் பொருளை விரைவாக சிதைப்பதற்கும், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை குறைப்பதற்கும் திறன்மிகு நுண்ணுயிரிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நுண்ணுயிர் கலவை வெவ்வேறு வணிகப்பெயர்களில் விற்கப்படுகிறது. அவை விலை உயர்ந்தவை மற்றும் குறைந்த தரமுடையதாகும். தற்போது அரசு நிறுவனங்கள், தனிமைப்படுத்தப்பட்ட திறன்மிகு வேஸ்ட் டீகம்போசர் மற்றும் பயோ மினரல்ஸ் உற்பத்தி செய்து அவற்றை மேலும் பெருக்கி உரம் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்தூர் முறை

இந்த முறை இந்தியாவில் உரம் தயாரிப்பதற்கான முதல் விஞ்ஞான முயற்சியாகும். இந்த முறையில் கழிவு பொருட்களை சாணம் அல்லது மனித கழிவுகளால் பரப்பி ஈரப்படுத்தப்படுகிறது. குழியின் அளவு நீளம் 4- 6 மீட்டர், அகலம் ஒரு மீட்டர், உயரம் 1 மீட்டர் உடையதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களை அடுக்கு மூலம் குழியில் நிரப்பப்படுகிறது, 15 நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை கிளறி விட வேண்டும் போதுமான காற்றோட்டம் தரும்போது நுண்ணுயிரிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. உரம் 3, 4 மாதங்களில் தயாராகிவிடுகிறது.

நாடெப் முறை:

இந்த முறையில் குறைந்த அளவு கால்நடை சாணம் பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ மாட்டு சாணத்தில் இருந்து 40 கிலோ உரம் தயாரிக்கலாம். 100 டன் உரம் தயாரிக்க ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒரு பசுவின் சாணம் போதுமானது. மண்ணின் மேற்பரப்பில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு தொட்டியில் உரம் தயாரிக்கப்படுகிறது.

உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு 15 சென்டிமீட்டர் அளவு இடைவெளியுடன் 9 அடுக்கில் இந்த தொட்டி கட்டப்படுகிறது இவ்வாறு அமைப்பதால் காற்றின் சுழற்சி நன்கு இருக்கும். சுவர் சாணத்தால் பூசப்பட்டிருக்க வேண்டும். கழிவு பொருட்கள் அடுக்கு மூலம் தொட்டியில் நிரப்பப்படுகிறது. முதல் அடுக்கு பயிர் கழிவுகள், களைகள் புல் போன்றவை 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த அடுக்கிற்கு மேல் 125 லிட்டர் தண்ணீரில் மாட்டு சாணத்தை கொண்டு தயாரித்த கரைசலை மெல்லிய அடுக்கு வடிவில் பரப்பப்படுகிறது. இந்த அடுக்குகள் செங்கல் மட்டத்திலிருந்து 0.6 முதல் 0.75 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும்.
 
தொட்டியை அதன் முழு கொள்ளளவில் நிரப்ப 11- 12 அடுக்குகள் தேவை. ரெண்டு நாட்களில் கழிவுகளை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் குவியல்களில் வாயு கசிவு ஏற்படக் கூடாது.

20 நாட்களுக்குப் பிறகு குப்பை அமிழ்ந்த பிறகு 9 அங்குலங்கள் தொட்டியில் இறங்கி அதே முறையில் நிரப்பப்பட்டு மீண்டும் மண் மற்றும் சாணத்தை கொண்டு மூட வேண்டும். 160 - 175 கன அடி உயரம் மற்றும் 40- 50 கன அடி அளவு கழிவு பொருட்களில் இருந்து சுமார் மூன்று டன் எடையுள்ள உரம் பெறப்படுகிறது. ஒரு பசுவில் இருந்து ஒரு வருடத்தில் சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து 80 டன் உரம் தயாரிக்கலாம் இதில் 100 கிலோ தழைச்சத்து, 560 கிலோ மணிச்சத்து மற்றும் 140 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும். ஒரு தொட்டியை உருவாக்க ரூபாய் ஆயிரம் செலவாகும்.

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்: தொழில்முனைவோர் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்: தொழில்முனைவோர் உடனே விண்ணப்பிக்கலாம்!
கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!
கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு
கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு
கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
Kolathur MLA V S Babu : வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
Embed widget