மேலும் அறிய
Madurai ; சிறு தானிய திருவிழா: ஆட்சியரின் அழைப்பு.. ஆரோக்கிய வாழ்வுக்கு வழி - மானியங்கள், புதிய வாய்ப்புகள்!
சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் குறைந்த நீர் தேவையுடன் வளரும் Climate Resilient Crops ஆகும். - மாவட்ட ஆட்சியர்.

மதுரை மாவட்ட ஆட்சியர்
Source : whatsapp
அன்றாட உணவில் சிறு தானியங்களை எடுத்துக்கொண்டு நோய்கள் இல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், இன்று (17.02.2026) பேரையூர் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்தவும், தொழில்நுட்ப விவரங்கள் அறியவும், துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
ஏக்கருக்கு ரூ.6000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவிக்கையில்...,” தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை சார்பில் சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிறுதானியங்கள் நமது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக திகழ்கின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் குறைந்த நீர் தேவையுடன் வளரும் Climate Resilient Crops ஆகும். மண் வளத்தை பாதுகாக்கவும், நீர் சேமிப்பை மேம்படுத்தவும், நிலையான வேளாண்மையை உறுதிப்படுத்தவும் இவை பெரிதும் உதவுகின்றன. மதுரை மாவட்டத்தில் 2024–25 ஆம் ஆண்டில் 11,680 எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு, சராசரி உற்பத்தி எக்டருக்கு 3197 கிலோ என பதிவாகியுள்ளது. 2025–26 ஆம் ஆண்டில் 10,132 எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.6000 வரை மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட சிறுதானியங்களுக்கு கிலோக்கு ரூ.30 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. விதைகள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
உணவே மருந்து
விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய Direct Marketing வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் SHGs மற்றும் FPOs தயாரித்துள்ள Value Added Millet Products கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது கிராமப்புற தொழில்முனைவோருக்கு வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும். சிறுதானியங்கள் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களை கட்டுப்படுத்த உதவும் சத்தான உணவு ஆகும். “உணவே மருந்து” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் உணவாக சிறுதானியங்கள் திகழ்கின்றன. சிறுதானியங்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் நாளை முதல் மூன்று வேளை உணவில் ஒரு வேளையாவது சிறுதானிய உணவு உட்கொள்வோம் என உறுதிமொழி எடுத்து ஹோட்டல்களில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தங்கள் அன்றாட உணவில் சிறு தானியங்களை எடுத்துக்கொண்டு நோய்கள் இல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இயற்கை பஜார் நடத்தப்பட்டது. உணவுத்திருவிழாவில் அங்கன்வாடி ஊழியர்கள் சிறுதானியங்களை கொண்டு லட்டு, ஐஸ்கிரீம் போன்றவை தயாரித்தார்கள். அப்பொழுதுதான் சிறுதானியங்களில் இவையெல்லாம் செய்ய முடியும் என தெரிய வந்து விழிப்புணர்வு ஏற்பட்டது. எனவே, விவசாயிகள் அனைவரும் அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























