மேலும் அறிய

மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

பருத்தி விற்பனை செய்த விவசாயிகளின் பருத்திக்கான பணம் சுமார் 1கோடியே 38 லட்சம் ரூபாயை வழங்கவில்லை என கூறி  குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை செய்த விவசாயிகளின் பருத்திக்கான பணம் சுமார் 1கோடியே 38 லட்சம் ரூபாயை அவர்களுக்கு வழங்கவில்லை என கூறி  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா கடைமடை பகுதிகளில் கடைமடை மாவட்டமாக இருந்து வருகிறது மயிலாடுதுறை மாவட்டம். இங்கு மீன்பிடி  தொழிலும், விவசாயமும் பிரதானமாக செய்யப்படுகிறது. குறிப்பாக நெல்லும் நெல்லுக்கு  அடுத்தபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடியிலும் ஈடுபட்டுகின்றனர். மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய 4 இடங்களில் வேளாண் விற்பனைக்குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மயிலாடுதுறை மாவட்டம்  மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தியை கொண்டு வந்து இங்கு நடைபெறும் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில்,  மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநில மில் அதிபர்களாலும், தேனி, கோவை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர்,  திருவாரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்ட மில் அதிபர்கள், வணிகர்களாலும் பருத்தி கொள்முதல் செய்து வருகின்றனர்.

Chennai Flood: மிரட்டும் புயலால் இன்று முதல் டிச.9 வரையான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை. அறிவிப்பு


மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

அந்த வகையில், குத்தாலம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2022 - 23 ஆம் ஆண்டுக்கான கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே பருத்திக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கான பணம் இதுநாள் வரை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பணத்தை கேட்டும் சென்றுள்ளனர்.  அதற்கு அதிகாரிகள் இரண்டு நாட்களில் வந்துவிடும், ஒரு வார காலங்களில் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அலட்சியமா கூறி அனுப்பி உள்ளனர்.


மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

இதனை கேட்டு ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் தங்கள் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை என சுமார் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் வரை பணம் வர வேண்டி உள்ளதென கூறி, பருத்தி ஏலம் விற்பனை செய்ததற்கான டோக்கனை கையில் வைத்துக்கொண்டு இன்று குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பணம் எப்போதும் வரவு வைக்கப்படும் என்று கேட்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த குத்தாலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பருத்திக்கான பணம் அவர் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்ற ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி விவசாயிகளை கேலி செய்வதா?" - மயிலாடுதுறையில் தவெக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget