மேலும் அறிய

பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?

பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் 2,318 கோடியை பெற்றுக்கொண்டு வெறும் 560 கோடி காப்பீட்டு தொகையை வழங்கி ஊழலில் ஈடுபடுகிறது என மயிலாடுதுறையில்  விவசாயிகள் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செப்டம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். 


பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?

இதில் விவசாயி அன்பழகன் பேசுகையில், ’’தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நெல் பயிருக்கான காப்பீட்டு ப்ரீமியமாக தமிழக அரசு 1375 கோடி ரூபாய், மத்திய அரசு 825 கோடி ரூபாய், விவசாயிகளின் பங்களிப்பாக 120 கோடி ரூபாய் என மொத்தம் 2319 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான கிராமங்களுக்கு ஜீரோ பாதிப்பு என பொய்யாக கணக்கு காட்டப்பட்டு, பாதிப்புக்கான நிவாரணத் தொகையாக 560 கோடி ரூபாய் மட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. 


பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?

இந்த காப்பீட்டை தமிழக அரசே எடுத்து நடத்தினால் அரசுக்காவது வருமானம் சென்று சேரும். இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு காப்பீடே தேவையில்லை. மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று குறுவைக்கு 10,000 ரூபாய், சம்பா பருவத்துக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய விவசாயி குருகோபி கணேசன் கூறுகையில், ’’மயிலாடுதுறை மாவட்டத்தில் உதவி வேளாண் அலுவலர்கள் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் . 

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 5,299 கன அடியில் இருந்து 4,524 கன அடியாக குறைவு...


பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?

பயிர் பாதிப்பு உள்ளது போல கணக்கு காட்டுவதற்காக பணம் கொடுக்கும் கிராமங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை அறிவிக்கப்படுகிறது’’ என்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே பகீர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இந்த ஊழலை தடுக்க 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் வேளாண் அலுவலர்களை வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும், உரிய விசாரணை செய்து பரிசீலித்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Rameswaram: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்..


பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?

மேலும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்ட வழிகாட்டு நெறிமுறையின்படி 2022-23 விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் வட்டாரங்களில் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 87 கிராமங்களுக்கு முதல் தவணையாக 38,650 விவசாயிகளுக்கு 49.68 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதில் 95.9 லட்சம் ரூபாய், 485 விவசாயிகளுக்கு வங்கி கணக்கு சரிபார்க்க இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?

முன்னதாக, கூட்டுறவுத்துறையின் சார்பில் கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக தலா 45 ஆயிரம் ரூபாய் வீதம் 24 மகளிருக்கு கறவை மாடு வாங்குவதற்காக 10.80 லட்சம்  ரூபாய்க்கான  காசோலையினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget