மேலும் அறிய

மதுரை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கும் திட்டம் !

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மனியமும் வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கான வட்டாட்சியரின் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மதுரை தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்
 
தோட்டக்கலைத்துறையின் மூலம் சொட்டு நீர்ப்பாசனத்திற்கு மானியம்
 
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ், தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மனியமும் வழங்கப்படுகிறது. சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறையை பின்பற்றுவதால் 30 முதல் 40% வரை நீர் சேமிக்கப்படுகிறது. பாசன நீரானது தாவர வேரின் பக்கத்தில் மட்டும் செல்வதனால் களைகள் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
 
ரூ.200 இலட்சம் ஆதி திராவிட இனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது
 
Fertigation முறையில் நீருடன் உரம் கலந்து செலுத்துவதால் உரத்திற்கான செலவு குறைவதுடன் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் தற்சமயம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருவதால் இம்முறையின் பயன்பாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை கருத்தில் கொண்டு இவ்வாண்டு ரூ.1039 இலட்சம் மானியம் மதுரை மாவட்ட தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.200 இலட்சம் ஆதி திராவிட இனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், நிலம் பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.
 
பயிரின் மகசூல் அதிகரிக்கும்
 
மேலும் இத்திட்டத்தின்கீழ் தானியங்கி நீர் பாசன அமைப்புகள் (Automation) அமைப்பதற்கு ஒரு எக்டருக்கு ரூ.20,000- மானியம் வழங்கப்படுகிறது. இதனை அமைப்பதன் மூலம் பயிர்களுக்கு சரியான நேரத்தில் பயிரின் அளவிற்கு தகுந்த நீர் வழங்கப்படுவதால் பயிரின் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் நேரம் மற்றும் உழைப்பை குறைக்கலாம், உரங்கள் மற்றும் நீர் சம நிலையில் வழங்கப்படுவதால் மண் சத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
 
இத்திட்டத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு பெறுவதற்கு குடும்ப அட்டையின் நகல், கணினி மூலம் பெறப்பட்ட சிட்டா, அடங்கல், நிலவரைபடம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான வட்டாட்சியரின் சான்று ஆகிய தேவையான ஆவணங்களை மதுரை தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் மற்றும் (http://tnhorticulture.tn.gov.in/) என்ற இணையத்தில் தாங்களே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget