மேலும் அறிய

Drip irrigation System: 100%  மானியத்தில் கிணறுகள்..! மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி..! வழிமுறைகள் இதுதான்

100 % மானியத்தில் ஆழ்துளை கிணறு /  குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன்  நுண்ணீர்  பாசன வசதி  அமைத்து   கொடுக்க  அரசாணை வழங்கப்பட்டு, அதன்படி  இத்திட்டம்  செங்கல்பட்டு   மாவட்டத்தில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதி திராவிட (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு 100%  மானியத்தில் கிணறுகள் (ஆழ்துளை (அ) குழாய்க் கிணறுகள்)  அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்டு (அ)  மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருதல் திட்டம் குறித்த தகவல்ககள்.

நுண்ணீர்  பாசன வசதி

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்  அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தனிப்பட்டட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100  சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு /  குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன்  நுண்ணீர்  பாசன வசதி அமைத்து  கொடுக்க  அரசாணை வழங்கப்பட்டு, அதன்படி  இத்திட்டம்  செங்கல்பட்டு   மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு துளி நீரில்  அதிக பயிர்  

தமிழ்நாடு முழுவதிலும்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பட்ட ஆதிதிராவிட   மற்றும் பழங்குடியின   விவசாயிகள்    பயன்பெறும்    வகையில்     ஊரக வளர்ச்சி     ஊராட்சி துறையினரால்  அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்தின் கீழ்   2022-23 ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள   தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம்  உருவாக்கப்படும் கிணறுகளுக்கு மின்/ சூரிய சக்தி மூலம் நீர் இறைக்கும்  அமைப்பு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உருவாக்கப்பட்டபின்,  பாசன நீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள்  மற்றும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு நிறுவும்  பணிகள் பிரதம மந்திரி  வேளாண் நீர்ப்பாசன திட்டம் – ஒரு துளி நீரில்  அதிக பயிர்  - நுண்ணீர் பாசனத் திட்டம் வேளாண்மை/   தோட்டக்கலைத் துறையினரால் ஏற்படுத்தப்படும்.

சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின  விவசாயிகளும்

வருவாய் துறையின் மூலம்  வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழின் அடிப்படையில்  இத்திட்டதின்  பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்திற்காக   இதுவரை விவசாயிகளை   கண்டறியப்படும்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் , பாசன அமைப்புகளை உருவாக்கி  நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும்  என்ற  உயரிய  எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள   இத்திட்டத்தினை வேளாண்   பெருமக்கள்    பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மைப்  பொறியியல் துறை அலுவலகத்தினை  அணுகலாம்.

செங்கல்பட்டு  மாவட்ட  விவசாயிகள்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

1)  செயற்பொறியாளர்(வே.பொ.)

     487, அண்ணா சாலை,

     நந்தனம், சென்னை-35.

2)  உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

      வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம்,

      ஐயனார் கோயில் பேருந்து நிலையம்,

      மதுராந்தகம்(இருப்பு) சிலாவட்டம்,

     மதுராந்தகம் – 603  306. கைபேசி எண்:94440  73322

3) உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

     487, அண்ணா சாலை,

     நந்தனம், சென்னை-35. கைபேசி எண்:94443  18854

தலைப்பு செய்திகள்

மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!
மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்டா விவசாயிகள் விடுத்த 'கெடு': மங்கைநல்லூர் தீர்மானங்கள்!
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்: தஞ்சையில் பரபரப்பு
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
Embed widget