மேலும் அறிய

தஞ்சாவூர் : தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம்.. கோரிக்கை என்ன?

விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர்  தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அளித்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். கஜா புயலின் போது லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். மிஞ்சிய தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில் தற்போது தென்னை விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்வது அடிமாட்டு விலைக்கு கேட்கப்படுகிறதாம். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தேங்காய் உடைப்பு நூதன போராட்டம் நடத்தினர். இது குறித்து  தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் மல்லிப்பட்டினம் கமால் பாட்சா தலைமையில் பாசனதாரர் சங்க தலைவர் பொன்வராயன் கோட்டை வீரசேனன், ஆழ்துளை விவசாய பாசன சங்க ஒன்றிய தலைவர் முருகேசன், பாசனதாரர் சங்க தலைவர் 2ம் புலிகாடு ராமகிருஷ்ணன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன், ஆம்பலாப்பட்டு தங்கவேல் உட்பட ஏராளமான விவசாயிகள் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தேங்காயை அடிமாட்டு விலைக்கு வாங்குவதால் கட்டுப்படியாவதில்லை, ரூ.8-க்கு கூட தேங்காய் விற்க முடியாததால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். எனவே உரித்த தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தஞ்சாவூர் : தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம்.. கோரிக்கை என்ன?

இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர்  விரைந்து வந்து உங்கள் கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனுவாக கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.., பாசனதாரர் சங்க தலைவர் ஆம்பலாப்பட்டு தங்கவேல் கூறுகையில் .. நல்ல தரமான விதை விதைத்தால்தான் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டுக்கோட்டை பகுதியில் விதை நெல்லில் அகத்தூய்மை, புறத்தூய்மை அகற்றாத கலப்பின நெல்விதைகளை கூடுதல் விலைக்கு தனியார் கடைகளில் விற்பனை செய்கின்றனர் என்றனர்.


தஞ்சாவூர் : தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம்.. கோரிக்கை என்ன?
 
தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் மல்லிப்பட்டினம் கமால்பாட்சா தெரிவித்தது : நெல், கரும்புக்கு அடுத்து பெரிய அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு தேங்காய் ரூ. 22க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 8க்கு கூட விலை கேட்க ஆளில்லை. தென்னை விவசாயிகள் இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, நெல், கரும்புபோல தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். மதுக்கூர் ராமச்சந்திரன் பேசுகையில், தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

டெல்டாவில் அடுத்த பேரழிவு? சம்பா சாகுபடியும் காலி... அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயரும் அபாயம்: அன்புமணி அதிரடி எச்சரிக்கை!
டெல்டாவில் அடுத்த பேரழிவு? சம்பா சாகுபடியும் காலி... அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயரும் அபாயம்: அன்புமணி அதிரடி எச்சரிக்கை!
சோளத்திற்கு மாறும் டெல்டா விவசாயிகள்! உடனடி வருமானம் தருவதால் புதிய நம்பிக்கை
சோளத்திற்கு மாறும் டெல்டா விவசாயிகள்! உடனடி வருமானம் தருவதால் புதிய நம்பிக்கை
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை: மருங்குளம் வயல்களில் கொல்கத்தா தொழிலாளர்களின் கடும் உழைப்பு!
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை: மருங்குளம் வயல்களில் கொல்கத்தா தொழிலாளர்களின் கடும் உழைப்பு!
மும்முனை மின்சாரம் கைகொடுக்கவில்லை... மனம் தளராத விவசாயிகள் களத்தில் தீவிரம்
மும்முனை மின்சாரம் கைகொடுக்கவில்லை... மனம் தளராத விவசாயிகள் களத்தில் தீவிரம்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Embed widget