மேலும் அறிய

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்"தல இருக்குறப்போ வால் ஆடலாமா"பதிலடி கொடுக்கும் திமுக

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அதிகாரத்தில் பங்கு கேட்ட நிலையில் தலைவர்கள் சரியான வழியில் பயணிக்கும் போது வால்கள் ஆடலாமா என அட்டாக் செய்துள்ளார் திமுக சரவணன்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற குரல் அதிகம் எழுந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் என சொல்லி புயலை கிளப்பினார். அதேபோல் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் அதே கருத்தை சொல்லியுள்ளது திமுகவினரின் விமர்சனத்தில் சிக்கியுள்ளது. சர்வே ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த சர்வேயின்படி திமுகவுக்கு 17.07 வாக்கு சதவீதமும், காங்கிரஸுக்கு 3.10 வாக்கு சதவீதமும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! தொகுதியை மட்டுமல்லாமல் அதிகாரத்தையும் பகிர்வதற்கான நேரம்” என கூறியுள்ளார்.

இதற்கு திமுக வழக்கறிஞர் சரவணன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான பதிவில், ‘இது காங்கிரஸ் இயக்கத்தின் குரல் போலத் தெரியவில்லையே. தலைவர்கள் சரியான வழியில் பயணிக்கும் போது வால்கள் ஆடலாமா? திமுகவினரும் இப்படி கருத்து கண்ணாயிரமாக மாறி கருத்துகளை சொன்னால், யாருக்கு கொண்டாட்டம்? பாஜக/ஆர்எஸ்எஸ் கூட்டத்தினருக்குத் தானே? அவர்கள் அதைத்தானே விரும்புகிறார்கள். ராகுல் காந்தி அவர்களை திமுகவினரை போல கொண்டாடுபர்கள் வேறு யார்? தேர்தல் காலத்தில், இது போல ருபாய்க்கு பத்து சர்வேக்கள் ஆயிரம் வரும், கள நிலவரம் என்ன என்பதனை அனைவரும் அறிவர்” என விமர்சித்துள்ளார்.

திமுக முன்னாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா தனது பதிவில், ‘சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன், தகைசால் தமிழர் அய்யா பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் “ஓரணியில் நின்று ஆர் எஸ் எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்” என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர். அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் “இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது” மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய “முடிந்து போன” குரலை அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூரில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல்
செளமியா அன்புமணி தேர்தலில் போட்டியா? - அண்ணாமலையார் சன்னதியில் வேட்பாளர் பட்டியல் - சிறப்பு வழிபாடு ரகசியம் என்ன?
செளமியா அன்புமணி தேர்தலில் போட்டியா? - அண்ணாமலையார் சன்னதியில் வேட்பாளர் பட்டியல் - சிறப்பு வழிபாடு ரகசியம் என்ன?
BJP Candidate List: பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ...
பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ...
Nainar Nagendran: தூசி தட்டப்படும் ரூ.4 கோடி வழக்கு.. சிக்கலில் நயினார்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Nainar Nagendran: தூசி தட்டப்படும் ரூ.4 கோடி வழக்கு.. சிக்கலில் நயினார்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Iran Hormuz: 6 நாடுகள் மட்டும் ஹார்மஸ் வழியாக பயணிக்கலாம், இந்தியா செய்தது என்ன? - ஈரான் அறிவிப்பு
Iran Hormuz: 6 நாடுகள் மட்டும் ஹார்மஸ் வழியாக பயணிக்கலாம், இந்தியா செய்தது என்ன? - ஈரான் அறிவிப்பு
’’காங்கிரஸால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பே கேள்விக்குறி’’ அதிரவைத்த திருமா பேச்சு- நடந்தது என்ன?
’’காங்கிரஸால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பே கேள்விக்குறி’’ அதிரவைத்த திருமா பேச்சு- நடந்தது என்ன?
Train Middle Berth sleeping time: ரயிலில் மிடில் பெர்த்தில் இனி இந்த நேரத்தில் மட்டுமே தூங்க முடியும்.! பயணிகளுக்கு புதிய விதிமுறை வெளியீடு
ரயிலில் மிடில் பெர்த்தில் இனி இந்த நேரத்தில் மட்டுமே தூங்க முடியும்.! பயணிகளுக்கு புதிய விதிமுறை வெளியீடு
BJP candidate : பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ...
பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ...
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
Embed widget