மேலும் அறிய

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஆதரித்தும், தேர்தல் பத்திர முறை தவறானது என்று அதை தடை செய்தும் அதிரடிகளை காட்டிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான டி.வை சந்திர சூட்டின் பதவி காலம் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற ரேஸ் உச்சம் பெற்றுள்ளது..

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு அடுத்தபடியாக சீனியர் மோஸ்ட் நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார் டிவை சந்திர சூட்.

இந்நிலையில் யார் இந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா என்று விரிவாக பார்க்கலாம். கடந்த 1960ல் டெல்லியில் பிறந்தவர் சஞ்சீவ் கண்ணா. தந்தையோ டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, தாயோ டெல்லி ஸ்ரீராம் கல்லூரியின் பேராசிரியை. டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற சஞ்சீவ் கண்ணா 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார், பின்னர் டெல்லி நீதிமன்றத்திற்கும் தீர்ப்பாயங்களுக்கும் வழக்கறிஞர் ஆனார். 

வருமான வரித்துறையின் நீண்ட கால வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கூடுதல் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய சஞ்சீவ் கண்ணா, 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டு, பின்னர் அடுத்த ஆண்டே நீதிபதியானார். 

பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லி நீதித்துறை அகாடமி ஆகியவற்றல் பல்வேறு பொறுப்புகளை வகித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2019 ஜனவரி 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற வெகு சிலரில் சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர். 


உச்சநீதிமன்ற சட்ட பணிக்குழுவின் தலைவராக பதவி வகித்து, தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆலோசகராகவும் பல்வேறு பொறுப்புகளை வகுத்து வருகிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் தெரிவித்த கருத்துக்கு எதிரான வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் விசாரணைக்காக வந்தபோது, இந்த நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமையும் கருத்து சுதந்திரம் இருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது, ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, கருத்து சுதந்திரம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை நசுக்க பார்ப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்து, செய்தியாளருக்கு எதிரான FIR- ஐ ரத்து செய்ய மறுத்துவிட்டார். 

மேலும் டெல்லியின் கனவு திட்டமான சென்ட்ரல் விஸ்டா மறு வடிவமைப்பு திட்டத்திலும் இரண்டு நீதிபதிகள் ஒரு கருத்தை தெரிவித்தபோது, அதிலிருந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்தார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. 

அதேபோன்று சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு அண்ட் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கில் அதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தேர்தல் பத்திர முறைக்கு எதிரான வழக்கில், பாஜக அதனை தொடர வேண்டும் என்று வாதிட்ட போது, தேர்தல் பத்திர முறை தவறானது என்று தெரிவித்து தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் மத்திய நீதித்துறை அமைச்சகத்திற்கு, தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் அனுப்பி உள்ள பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா தேர்ந்தெடுக்க ப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை வீடியோக்கள்

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget