ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
முதலமைச்சர் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து மாறப்போவதாக பேச்சு அடிபட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விஜய் வாங்க திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நாள் முதல், அரசு ஊழியரைப் போல சாரியாக காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்து விடுகிறார். அதேபோல் மாலை 5 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு விடுகிறார்.
தினமும் நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு அவர் காரில் வந்து செல்லும் வேளையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.
இதனால் காலை, மாலை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து, பசுமை வழிச் சாலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் காலி செய்த வீடுகளில் ஏதாவது ஒன்றில் விஜய் குடியேற வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபட்டது. மேலும், போயஸ் கார்டன் பகுதியும் லிஸ்டில் இருப்பதாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை வாங்குவதற்கு விஜய் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீட்டை சுமார் 350 கோடி ரூபாய்க்கு வாங்க, வீட்டின் தற்போதைய உரிமையாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இது நடந்து போயஸ் கார்டனில் விஜய் குடியேறும் பட்சத்தில் அதன்பிறகு பொதுமக்களுக்கு பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலில் ஏற்படவும் வாய்ப்பில்லை.
சென்னையில் விவிஐபி ஏரியாவாக இருக்கும் இதே போயஸ் கார்டனில் தான் நடிகர் ரஜினிகாந்தும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















