மேலும் அறிய

BlockChain Technology | டிஜிட்டல் கரென்சியை செயல்படச் செய்யும் `பிளாக்செயின்’ தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

கிரிப்டோகரன்சியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஜிட்டல்கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, கிரிப்டோகரன்சியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

சமீபகாலமாகவே, க்ரிப்டோ கரன்சி குறித்த விவகாரங்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளன. பல்வேறு முதலீட்டாளர்களும் க்ரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் பெறும் முயற்சிகளைச் செய்து வரும் சூழலில், பலரும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பிட்காயின், ஈதெரியம், டாக் காயின் முதலான பல்வேறு க்ரிப்டோ கரன்சிகள் மைனிங் செய்தோ, விலை கொடுத்தோ, அந்த மதிப்புக்கு இணையான பொருள்களைக் கொடுத்தோ பெறக்கூடியவை. 

க்ரிப்டோ கரன்சிகளைச் செயல்படச் செய்யும் தொழில்நுட்பம் `பிளாக்செயின்’ (Blockchain) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் டேட்டா பதிவுகளை மேற்கொண்டு, அதனை மாற்றவோ, நெட்வொர்க்கை ஏமாற்றவோ செய்வதைக் கடுமையானதாக மாற்றுகிறது. அதே போல, இந்த டேட்டாவை அனைவரும் பார்க்கும்படியும், பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகக் காட்டப்படுகின்றன. 

BlockChain Technology | டிஜிட்டல் கரென்சியை செயல்படச் செய்யும் `பிளாக்செயின்’ தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

பிளாக் செயின் என்றால் என்ன?

பிளாக்செயின் என்பது பல்வேறு கணினிகளால் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க்குகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்யும் டிஜிட்டல் பதிவேடு. இந்த இணைப்புச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளின் விவரங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை புதிதாகப் பணப் பரிவர்த்தனை நிகழும் போதும், இந்த இணைப்புச் சங்கிலியிலும், பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவரின் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படும்.  Distributed Ledger Technology என்ற தொழில்நுட்பத்தின் கீழ், பிளாக்செயின் தொழில்நுட்பம் வேலை செய்கிறது. இங்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் `ஹேஷ்’ என்று அழைக்கப்படும் க்ரிப்டோகிராபிக் கையெழுத்துடன் பதிவு செய்யப்படுகிறது. 

Also Read | Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!

இந்தத் தொழில்நுட்பத்திற்கான மற்றொரு உதாரணம், கூகுள் டாக். கூகுள் டாக் பயன்படுத்தி, ஒரு ஆவணம் ஒரு குழுவினருடன் பகிரப்படும்போது, அது அவர்களின் கணினிக்கு மாற்றப்படாமல், பலராலும் பயன்படுத்த முடியும் என்றவாறு மாறுகிறது. ஒரே நேரத்தில் பலருக்கும் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் அனுமதியை இந்தத் தொழில்நுட்பம் வழங்குகிறது. 

BlockChain Technology | டிஜிட்டல் கரென்சியை செயல்படச் செய்யும் `பிளாக்செயின்’ தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

இது எப்படி வேலை செய்கிறது?

ஒரு பிளாக்செயினில் மூன்று முக்கிய கருப்பொருள்கள் இருக்கின்றன. அவை பிளாக் (Block), நோட் (Node), மைனர் (Miner) என்று அழைக்கப்படுகின்றன. 

ஒரு பிளாக்செயினில் பல்வேறு பிளாக்கள் வைத்திருப்பதோடு, ஒவ்வொரு பிளாக்கிலும் டேட்டா பதிவேற்றப்பட்டிருக்கும். இந்த டேட்டாவில் பணப் பரிவர்த்தனைகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தச் செயினை எந்த ஒரு தனி நபரோ, தனியார் நிறுவனமோ தங்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. 

இந்தச் செயினில் புதிய பிளாக்களை மைனிங் என்ற செயல்முறையின் மூலம் உருவாக்குபவர்கள் மைனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிகவும் கடினமாக கணக்குகளுக்கு விடை அளித்து அதன் மூலம் பிளாக்களில் டேட்டாவைச் சேகரிக்கச் செய்கின்றனர். ஒவ்வொரு பிளாக்கும் வெற்றிகரமாக மைனிங் செய்யப்பட்டவுடன், மைனர்களுக்குப் பணத் தொகை வழங்கப்படுகிறது.  

ஒவ்வொரு பிளாக்கும் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்தமாக செயின் உருவாகிறது. இந்த இணைப்புகளை நோட்கள் செய்கின்றன. மேலும் இந்த நோட்களால் மொத்த நெட்வொர்க்கும் இயங்குகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஒன் பிளஸ் மொபைலுக்கு ரூ.12 ஆயிரம் தள்ளுபடி.. எப்படி வாங்குவது?.. டிப்ஸ் இதோ!
ஒன் பிளஸ் மொபைலுக்கு ரூ.12 ஆயிரம் தள்ளுபடி.. எப்படி வாங்குவது?.. டிப்ஸ் இதோ!
Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!
Poco M8 Power: 3 நாட்கள் நிற்கும் சார்ஜ்.. போகோ நிறுவனத்தில் அசத்தல் ஸ்மார்ட்போன் இதோ!
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget