மேலும் அறிய

QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!

இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைக்கும் வகையில் சென்னையில் QR CODE மோசடி சமீபத்தில் நடந்தது. 

தொழில்நுட்பம் மூலம் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் போலீசாரும், வங்கிகளும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பல வழிகளிலும் மோசடி அரங்கேறி வருகிறது. மோசடியை ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதே ஒரே வழி என்பதுதான் உண்மையும் கூட. பேஸ்புக்கில் தெரிந்த நண்பர் போல கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது, வங்கியில் இருந்து தொலைபேசியில் பேசுவதைப்போல வங்கிக்கணக்கை தெரிந்துகொண்டு பணத்தை திருடுவது என டிஜிட்டல் திருட்டு தொடர்கிறது. அந்த வரிசையில் இப்படியும் செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கும் வகையில் சென்னையில் QR CODE மோசடி சமீபத்தில் நடந்தது. 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் துரை என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். டிஜிட்டல் முறையை பின்பற்றும் துரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை பெற QR CODEஐ பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கான ஸ்கேனிங் கோடை கடை சுவரில் ஒட்டி வைத்துவிட்டு தன் வழக்கமான வேலையை பார்த்து வந்துள்ளார். வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை ஸ்கேன் செய்து போட்டுள்ளனர். ஆனால் துரை கணக்கில் பணம் சேரவே இல்லை. ஏதேனும் சிக்கலா என வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது தான் துரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 


QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!

அவர் கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்கேன் கோட் அவரது வங்கிக்கணக்கைச் சேர்ந்ததே இல்லை என தெரியவந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என சிசிடிவியை ஆராயந்த போது இருவர் இரவில் வந்து ஸ்கேன் கோடை மாற்றி ஒட்டிச்சென்றது தெரியவந்தது. இது போலீஸ் விசாரணைக்கு செல்ல இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் ஏற்கெனவே போன்பே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இந்த மோசடியை அவர்கள் எளிதாக செய்துள்ளனர். மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் கடைக்காரர் துரை கவனக்குறைவாக இருந்ததே இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

1.வங்கிக்கணக்குடன் தொடர்புடைய QR CODE ஐ கடையின் வெளிப்புறம் ஒட்டி வைத்தது
2.வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் போதெல்லாம் சரியான பெயருக்குத்தான் பணம் சென்றதா என சரி பார்க்கத் தவறியது
3.வங்கிக் கணக்குக்கு பணம் வந்தாலும், எஸ் எம் எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அந்த தகவல் தனக்கு வருகிறதா என்ற விவரத்தையும் சரி பார்க்க தவறியது.

இப்படி சில கவனக்குறைவே துரை ஏமாற காரணமாகவும் இருந்துள்ளது. இன்றைய தேதிக்கு கடைகளில் QR CODE என்பது மிக அத்தியாவசியமானதாக ஆகிவிட்டது. வாடிக்கையாளர்களும் QR CODEஐ நம்பியே பல கடைகளுக்கு செல்கின்றனர். எனவே டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் கடைக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.


QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!

என்ன செய்யலாம்?

தற்போது ஸ்பீக்கருடன் கூட QR CODE அறிமுகமாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினால் உடனடியான எவ்வளவு பணம் செலுத்தினார்கள் என குரல் ஒலிக்கும். இதன் மூலம் உடனுக்குடன் பணம் செலுத்துவதை அறிந்துகொள்ளலாம்

தினமும் வங்கிக்கணக்கை சரி பார்க்க வேண்டும். எஸ் எம் எஸ் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் அன்றைய தினத்திற்கான தொகை சரியாக வங்கிக்கணக்கில் சேர்ந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்

QR CODE என்பது பணப்பெட்டி போல., எனவே அதனை கண்ட இடத்தில் ஒட்டி வைக்காமல். பார்வைக்கு அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். கடை மூடும்  போது QR CODEஐ உள்ளே எடுத்து வைத்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

QR CODEல் ஏதேனும் சிக்கலை உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியையோ, QR CODE பொருத்திய நிறுவனத்தையே தொடர்புகொண்டு சிக்கலை சரிசெய்துகொள்ள வேண்டும்.

செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சம்பவம் செய்ய காத்திருக்கும் திமுக... தமிழகமே திரும்பி பார்க்கும் விருதுநகர்- என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின்.?
சம்பவம் செய்ய காத்திருக்கும் திமுக... தமிழகமே திரும்பி பார்க்கும் விருதுநகர்- என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின்.?
Tamil Nadu Budget February 17 : கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
நம்பவைத்து துரோகம்; போராட்டத்துக்கு மத்தியில் பாராட்டு விழாவா? அரசு ஊழியர்களை இனியும் ஏமாற்றமுடியாது- அன்புமணி
நம்பவைத்து துரோகம்; போராட்டத்துக்கு மத்தியில் பாராட்டு விழாவா? அரசு ஊழியர்களை இனியும் ஏமாற்றமுடியாது- அன்புமணி
BCCI Contract: ஒரே ஒரு ஃபார்மெட்... குறைந்த சம்பளம்! கோலி-ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி.
BCCI Contract: ஒரே ஒரு ஃபார்மெட்... குறைந்த சம்பளம்! கோலி-ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி.
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சம்பவம் செய்ய காத்திருக்கும் திமுக... தமிழகமே திரும்பி பார்க்கும் விருதுநகர்- என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின்.?
சம்பவம் செய்ய காத்திருக்கும் திமுக... தமிழகமே திரும்பி பார்க்கும் விருதுநகர்- என்ன சொல்லப்போகிறார் ஸ்டாலின்.?
Tamil Nadu Budget February 17 : கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
நம்பவைத்து துரோகம்; போராட்டத்துக்கு மத்தியில் பாராட்டு விழாவா? அரசு ஊழியர்களை இனியும் ஏமாற்றமுடியாது- அன்புமணி
நம்பவைத்து துரோகம்; போராட்டத்துக்கு மத்தியில் பாராட்டு விழாவா? அரசு ஊழியர்களை இனியும் ஏமாற்றமுடியாது- அன்புமணி
BCCI Contract: ஒரே ஒரு ஃபார்மெட்... குறைந்த சம்பளம்! கோலி-ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி.
BCCI Contract: ஒரே ஒரு ஃபார்மெட்... குறைந்த சம்பளம்! கோலி-ரோகித்துக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி.
நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி
நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி
தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
Embed widget