மேலும் அறிய

QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!

இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைக்கும் வகையில் சென்னையில் QR CODE மோசடி சமீபத்தில் நடந்தது. 

தொழில்நுட்பம் மூலம் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் போலீசாரும், வங்கிகளும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பல வழிகளிலும் மோசடி அரங்கேறி வருகிறது. மோசடியை ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதே ஒரே வழி என்பதுதான் உண்மையும் கூட. பேஸ்புக்கில் தெரிந்த நண்பர் போல கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது, வங்கியில் இருந்து தொலைபேசியில் பேசுவதைப்போல வங்கிக்கணக்கை தெரிந்துகொண்டு பணத்தை திருடுவது என டிஜிட்டல் திருட்டு தொடர்கிறது. அந்த வரிசையில் இப்படியும் செய்ய முடியுமா என்று யோசிக்க வைக்கும் வகையில் சென்னையில் QR CODE மோசடி சமீபத்தில் நடந்தது. 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் துரை என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். டிஜிட்டல் முறையை பின்பற்றும் துரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை பெற QR CODEஐ பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கான ஸ்கேனிங் கோடை கடை சுவரில் ஒட்டி வைத்துவிட்டு தன் வழக்கமான வேலையை பார்த்து வந்துள்ளார். வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை ஸ்கேன் செய்து போட்டுள்ளனர். ஆனால் துரை கணக்கில் பணம் சேரவே இல்லை. ஏதேனும் சிக்கலா என வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது தான் துரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 


QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!

அவர் கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்கேன் கோட் அவரது வங்கிக்கணக்கைச் சேர்ந்ததே இல்லை என தெரியவந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என சிசிடிவியை ஆராயந்த போது இருவர் இரவில் வந்து ஸ்கேன் கோடை மாற்றி ஒட்டிச்சென்றது தெரியவந்தது. இது போலீஸ் விசாரணைக்கு செல்ல இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் ஏற்கெனவே போன்பே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இந்த மோசடியை அவர்கள் எளிதாக செய்துள்ளனர். மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் கடைக்காரர் துரை கவனக்குறைவாக இருந்ததே இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

1.வங்கிக்கணக்குடன் தொடர்புடைய QR CODE ஐ கடையின் வெளிப்புறம் ஒட்டி வைத்தது
2.வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் போதெல்லாம் சரியான பெயருக்குத்தான் பணம் சென்றதா என சரி பார்க்கத் தவறியது
3.வங்கிக் கணக்குக்கு பணம் வந்தாலும், எஸ் எம் எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அந்த தகவல் தனக்கு வருகிறதா என்ற விவரத்தையும் சரி பார்க்க தவறியது.

இப்படி சில கவனக்குறைவே துரை ஏமாற காரணமாகவும் இருந்துள்ளது. இன்றைய தேதிக்கு கடைகளில் QR CODE என்பது மிக அத்தியாவசியமானதாக ஆகிவிட்டது. வாடிக்கையாளர்களும் QR CODEஐ நம்பியே பல கடைகளுக்கு செல்கின்றனர். எனவே டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் கடைக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.


QR Code Fraud: ஸ்கேன் பண்ணுவாங்க.. ஆனா பணம் ஏறாது.. QR CODEல் நடக்கும் மோசடி.. உஷார் பதிவு!

என்ன செய்யலாம்?

தற்போது ஸ்பீக்கருடன் கூட QR CODE அறிமுகமாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினால் உடனடியான எவ்வளவு பணம் செலுத்தினார்கள் என குரல் ஒலிக்கும். இதன் மூலம் உடனுக்குடன் பணம் செலுத்துவதை அறிந்துகொள்ளலாம்

தினமும் வங்கிக்கணக்கை சரி பார்க்க வேண்டும். எஸ் எம் எஸ் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் அன்றைய தினத்திற்கான தொகை சரியாக வங்கிக்கணக்கில் சேர்ந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்

QR CODE என்பது பணப்பெட்டி போல., எனவே அதனை கண்ட இடத்தில் ஒட்டி வைக்காமல். பார்வைக்கு அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். கடை மூடும்  போது QR CODEஐ உள்ளே எடுத்து வைத்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

QR CODEல் ஏதேனும் சிக்கலை உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியையோ, QR CODE பொருத்திய நிறுவனத்தையே தொடர்புகொண்டு சிக்கலை சரிசெய்துகொள்ள வேண்டும்.

செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

iPhone 17 Huge Offer: இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
ரீசார்ஜ் டென்ஷன் இனி வேண்டாம்! Jio, Airtel, Vi-யின் ஆண்டு திட்டங்கள்: பணம் மிச்சம் & சிறந்த சலுகைகள்!
ரீசார்ஜ் டென்ஷன் இனி வேண்டாம்! Jio, Airtel, Vi-யின் ஆண்டு திட்டங்கள்: பணம் மிச்சம் & சிறந்த சலுகைகள்!
Smart Watch: ஸ்மார்ட்வாட்ச் வாங்க போறீங்களா? - இதெல்லாம் பார்த்து வாங்குங்க!
Smart Watch: ஸ்மார்ட்வாட்ச் வாங்க போறீங்களா? - இதெல்லாம் பார்த்து வாங்குங்க!
iPhone 20: ஆப்பிள்-னாலே Advanced தான்; முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரவிருக்கும் ஐபோன் 20; எப்போ லாஞ்ச்.?
ஆப்பிள்-னாலே Advanced தான்; முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரவிருக்கும் ஐபோன் 20; எப்போ லாஞ்ச்.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget