மேலும் அறிய

செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?

உங்களுடைய மொபைல் போன் திருடி போய்விட்டால் வங்கி விவரங்களை உள்ளிட்டவற்றை பாதுகாப்பது எப்படி தெரியுமா?

நவீன உலகத்தில் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக நம்முடைய மொபைல் போன் ஆகிவிட்டது. டிஜிட்டல் உலகில் நம்முடைய முக்கிய கருவியாக மொபைல் போன் தான் உள்ளது. பணப்பரிவர்த்தனைகள் முதல் உணவு ஆர்டர், கேப் புக் செய்வது எனப் பல தரப்பட்ட விஷயங்களுக்கு மொபைல் போன் மிகவும் அத்தியாவசியமாகிறது. இந்தச் சூழலில் நம்முடைய மொபைல் போன் திருடி போகிவிட்டால் நம்முடைய முக்கியமான விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும். 

உதாரணமாக பிரேசில் நாட்டில் ஒரு பகுதியில் குறிவைத்து பலரின் ஐபோன்கள் திருடி போகியுள்ளது. இவ்வாறு திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து வங்கி விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் பல ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக நாட்டில் மொபைல் போன் திருட்டு போனால் பெரியளவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆகவே மொபைல் போன் திருடப்பட்டால் நாம் முக்கியமாக செய்யவேண்டியவை என்னென்ன?

சிம் கார்டு பிளாக்:

முதலில் மொபைல் போன் திருடப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தை உடனடியாக தொடர்பு கொண்டு உங்களுடைய சிம் கார்டை பிளாக் செய்ய வேண்டும். இதை செய்ய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு கட்டணம் இல்லா எண்களை அறிவித்துள்ளனர். அதை பயன்படுத்தி நாம் இதை செய்ய வேண்டும். நீங்கள் புதிய மொபைல் வாங்கிய பிறகு அதே எண்ணில் மற்றொரு சிம் கார்டு பெற்று கொள்ளலாம். 


செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?

வங்கி கணக்கில் மொபைல் வங்கி சேவைகளை நிறுத்த வேண்டும்:

திருடு போன உங்களுடைய வங்கி கணக்கின் மொபைல் வங்கி சேவைகளை நீங்கள் பயன்படுத்தி வந்தால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை செய்வதற்கு எளிய வழி உங்களுடைய சிம் கார்டை பிளாக் செய்தால் போதும். ஏனென்றால் தற்போது அனைத்து வங்கிகளின் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றிற்கு ஓடிபி எண் கேட்கிறது. ஆகவே அது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும். அது இல்லாமல் எந்தவித வங்கி சேவையையும் செய்ய முடியாது. 

யுபிஐ பின்னை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்:

வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டால் அடுத்து திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. ஆகவே மொபைல் போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ பின் அல்லது கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும். 


செல்போன் தொலைந்து போனால் வங்கி கணக்கு மற்றும் யுபிஐ விவரங்களை பாதுகாப்பது எப்படி?

கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகள் கணக்கை முடக்க வேண்டும்:

கடைசியாக நீங்கள் திருடப்பட்டிருந்த மொபைல் போனில் கூகுள் பே மற்றும் பேடிஎம் பயன்படுத்தி இருந்தால் அதன் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அந்த கணக்குகளை முடக்க வேண்டும். இதன் மூலம் இந்த செயலிகளிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்க முடியும். 

காவல்துறை புகார்:

இந்த வேலைகள் செய்தவுடன் அருகே இருக்கும் காவல்துறையில் ஒரு புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையின் நகலை பெற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருவேளை உங்களுடைய வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டால் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை வைத்து நீங்கள் வங்கியில் புகார் அளிக்க முடியும். ஆகவே காவல்துறை புகாரும் மிகவும் முக்கியமான ஒன்று. 

மேலும் படிக்க: ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் வோடஃபோனின் அசத்தல் ஆஃபர்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian swamy slams Modi : ”பிரதமர் பதவிக்கு ஆப்பு! செப்.17 வர தான் டைம்”எச்சரிக்கும் சு.சுவாமிNTK Seeman : ”இப்படி பண்ணிட்டியே”தூக்கியடித்த சீமான்!cகலக்கத்தில் நாதகவினர்!DMK BJP : ”பாஜகவை வளர்க்கும் திமுக” ஸ்டாலின் ரகசிய கூட்டணி? அச்சத்தில் அதிமுகRahul gandhi : உடையும் INDIA கூட்டணி? பதற்றத்தில் காங்கிரஸ்! ராகுல் அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
83 வயது முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை: மீனாட்சி மருத்துவமனை சாதனை
83 வயது முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை: மீனாட்சி மருத்துவமனை சாதனை
மூளையில் வீக்கம்.. கடும் காய்ச்சல்.. 2 மாதங்களில் 28 குழந்தைகளின் உயிரை பறித்த மர்ம வைரஸ்!
மூளையில் வீக்கம்.. கடும் காய்ச்சல்.. 2 மாதங்களில் 28 குழந்தைகளின் உயிரை பறித்த மர்ம வைரஸ்!
குற்றாலம்  அருவியில் திடீரென உருண்டு வந்த கல்..! 5 பேர் படுகாயம்..!
குற்றாலம் அருவியில் திடீரென உருண்டு வந்த கல்..! 5 பேர் படுகாயம்..!
கள்ளச்சாராயத்திற்கு 10 லட்சம்; குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாதா? - நீதிபதிகள் கேள்வி?
கள்ளச்சாராயத்திற்கு 10 லட்சம்; குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாதா? - நீதிபதிகள் கேள்வி?
Embed widget