மேலும் அறிய

சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி: மேம்படும் வானிலை முன்னறிவிப்பு .!

சூறாவளிகள், மழைப்பொழிவு, வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பிற தீவிர வானிலைகள் தொடர்பாக துல்லியம் மற்றும் கணிப்புகளின் நேரத்தை சூப்பர் கம்ப்யூட்டர்கள் கணிசமாக மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 850 கோடி முதலீட்டு திட்டம்:

வானிலை, பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட, புவி அறிவியல் அமைச்சகத்தால் பெறப்பட்ட  உயர் செயல்திறன் கணினி (எச்பிசி) அமைப்பைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த லட்சிய திட்டம் ரூ. 850 கோடி முதலீட்டைக் கொண்டது. இது மிகவும் நம்பகமான, துல்லியமான வானிலை, காலநிலை முன்னறிவிப்புக்கான இந்தியாவின் கணக்கீட்டு திறன்களில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் காட்டுகிறது.

புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்),  நொய்டாவில் உள்ள நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்பு தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்) ஆகிய இரண்டு முக்கிய இடங்களில்  அமைக்கப்பட்டுள்ளன.

அர்கா, அருணிகா:

பாரம்பரியத்திற்கு இணங்க, இந்த அதிநவீன அமைப்புகளுக்கு சூரியனுடன் இணைக்கப்பட்டவான அமைப்புகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. முந்தைய      கம்யூட்டர்களுக்கு ஆதித்யா, பாஸ்கரா, பிரதியுஷ், மிஹிர் என்று பெயரிடப்பட்டது. புதிய கம்யூட்டர்களுக்கு அமைப்புகளுக்கு 'அர்கா', 'அருணிகா' என்று  பெயரிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கணக்கீட்டு கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்தும். அதிநவீன மாதிரிகளின் வளர்ச்சியை செயல்படுத்தும். இதன் மூலம் பல்வேறு பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் கடைசி மைல் சேவைகள் கணிசமாக மேம்படும்.

வானிலை:

இந்த உயர்-தெளிவுத்திறன் மாதிரிகள் வெப்பமண்டல சூறாவளிகள், அதிக மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை, வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்பான  துல்லியம் மற்றும் கணிப்புகளின் நேரத்தை கணிசமாக மேம்படுத்தும்.

இந்த மேம்பட்ட எச்பிசி அமைப்புகளைப் பயன்படுத்தி, புவி அறிவியல் அமைச்சகம் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பருவநிலை மாறுபாடு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் சவால்களுக்கு சிறந்த தயார்நிலை மற்றும் நடவடிக்கையை உறுதி செய்கிறது எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

செயல்திறன்:

ஐ.ஐ.டி.எம் அமைப்பு 11.77 பீட்டா ஃப்ளாப்ஸ் மற்றும் 33 பெட்டாபைட் சேமிப்பகத்தின் ஈர்க்கக்கூடிய திறன் கொண்டது, அதே நேரத்தில் என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப் வசதி 24 பெட்டாபைட் சேமிப்பகத்துடன் 8.24 பீட்டா ஃப்ளோப்ஸைக் கொண்டுள்ளது. இதில் கூடுதலாக, 1.9 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் பயன்பாடுகளுக்கு பிரத்யேக தனித்துவ அமைப்பு உள்ளது.

இந்த விரிவாக்கத்தின் மூலம், புவி அறிவியல் அமைச்சகம் அதன் மொத்த கணினி சக்தியை 22 பீட்டா ஃப்ளாப்ஸ் ஆக உயர்த்தும், இது முந்தைய திறனான 6.8 பீட்டா ஃப்ளாப்சிலிருந்து கணிசமான அதிகரிப்பாகும்.

எச்பிசி அமைப்பால் வழங்கப்படும் மேம்பட்ட கணக்கீட்டு திறன்கள், புவி அறிவியல் அமைச்சகத்தை தற்போதுள்ள தரவு ஒருங்கிணைப்பு திறன்களை மேலும் மேம்படுத்தவும், அதன் உலகளாவிய வானிலை முன்கணிப்பு மாதிரிகளின் இயற்பியல் மற்றும் இயக்கவியலை அதிக  தெளிவுத்திறனில் செம்மைப்படுத்தவும் அனுமதிக்கும். மேலும், பிராந்திய மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பகுதிகளின் மேல் 1 கிமீ அல்லது அதற்கும் குறைவான தூரத்தில் சிறந்த தெளிவுத்திறனை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
Embed widget