மேலும் அறிய

Satya Nadella: ”தொழில்நுட்பத்தின் உச்சம் இதுதான், அதில் இந்தியா தான் முதலிடம்” - மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாதெல்லா

தொழில்நுட்பத்துறையில் அடுத்த 2 ஆண்டுகள் என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா எச்சரித்துள்ளார்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் நெருக்கடி காரணமாக, ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து வருகிறது. இதனால், ஊழியர்கள் பலரும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, மும்பையில்  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அதிகரித்த தேவை குறைந்துள்ளது:

அப்போது, "தொழில்நுட்பத் துறை எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதன் அடிப்படையில் சொல்கிறேன், இது எங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் நேரம். தொழில்நுட்ப துறையில் நடக்கும் மிகவும் உற்சாகமான விஷயம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு திறன் பயன்பாட்டிற்கு வருவது தான். கொரொனா பரவல் காரணமாக ஏற்பட்ட தேவை அதிகரிப்பு தற்போது தணிய தொடங்கியுள்ளது. இது உலகின் பல பகுதிகளில் மந்தநிலையுடன் சேர்த்து,  தொற்றுக்கு முந்தைய சூழலில் இருந்த இயல்புநிலையையும் மீண்டும் கொண்டு வருகிறது.

2 ஆண்டுகளுக்கு மோசமான சூழல்:

அடுத்த இரண்டு ஆண்டுகள் என்பது தொழில்நுட்ப துறைக்கு மிகுந்த சவால் வாய்ந்ததாக இருக்கும். இதனால் உலகின் பல பகுதிகளிலும் உண்மையான தீவிரமான நெருக்கடி உள்ளது. அதேநேரம், கடும் வலி நிறைந்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழில்நுட்பத்துறை பிரமாண்ட வளர்ச்சியை அடையும்.

தொழில்நுட்பத்தின் உச்சம் எது?

செல்போன்கள் மற்றும் கிளவுட் தான் தொழில்நுட்ப துறையின் உச்சகட்டம் என்று யாரேனும் நினைத்தால், செயற்கை நுண்ணறிவு திறன் தான் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என நான் நினைக்கிறேன். அதுவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நடக்கப் போகிறது.  2007-2008ம் ஆண்டுகளில் செல்போன் மற்றும் கிளவுட் வசதி அறிமுகமானபோது பொதுமக்கள் எத்தகைய மனநிலையில் இருந்தனரோ, அப்படி ஒரு நிலையில் தான் தற்போது செயற்கை நுண்ணறிவு மீதும் கொண்டுள்ளனர்" என்றார். 

முதலிடத்தில் இந்தியா:

இந்தியாவைப் பற்றிப் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் என வரும்போது உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  அப்படியானால், தொழில்நுட்பதுறையில் அடுத்த யுகமாக செயற்கை நுண்ணறிவு திறன் இருக்கும்.  எனவே இந்தியா மீது நீண்ட காலத்திற்கு கவனம் செலுத்த  வேண்டும். அதோடு, 6-7 சதவிகித வளர்ச்சியை காண்பது என்பது இந்தியாவிற்கு சர்வ சாதாரணமாக விஷயமாக உள்ளது. பணவீக்கம் மற்றும் மந்தநிலை போன்ற பிரச்னைகள் பல நாடுகளுக்கு சவாலாக இருந்தாலும், அவற்றில் இருந்து விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.  இதன் காரணமாக தான் இந்தியா மீது மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் உறுதியாக உள்ளது. அதோடு அதிக முதலீடுகளையும் செய்து வருகிறது. தற்போதைய கேள்வி என்பது எங்களுடைய தொழில்நுட்பம் அனைத்தையும் கொண்டு, அடுத்ததாக இந்தியா எதை உருவாக்க போகிறது என்பது தான்” எனவும், சத்யா நாதெல்லா பேசியுள்ளார்.

 

பிரதமருடன் சந்திப்பு

இந்நிலையில், பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்துள்ளார். இதுதொடர்பான் டிவிட்டர் பதிவில், டிஜிட்டல் இந்தியா பார்வையை உணர்ந்து உலகிற்கு வெளிச்சமாக இந்தியாவுக்கு உதவ நாங்கள் எதிர்நோக்குகிறோம் என, பிரதமர் மோடி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget