மேலும் அறிய

மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. VPN வழங்குநர்களுக்கு ஆறுதல் அளித்த மத்திய அரசின் உத்தரவு..

தங்களது புதிய நிபந்தனைகளை அமல்படுத்த, virtual private network அல்லது விபிஎன் சேவை நிறுவனங்களுக்கு மேலும் 3 மாதகாலம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தங்களது புதிய நிபந்தனைகளை அமல்படுத்த, virtual private network என்று அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் பிணையம்  அல்லது விபிஎன் சேவை நிறுவனங்களுக்கு மேலும் 3 மாதகாலம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

புதிய விதிமுறை:

The Indian Computer Emergency Response Team (சிஇஆர்டி)யானது இந்தியாவில் இயங்கும் மெய்நிகர் தனியார் பிணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள், புதிய விதிமுறைகளை மேலும் 3 மாதங்களுக்கு பின்பற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. க்ளவுட் சேவை மற்றும் டேட்டா செண்ட்டர்களுடன் இயங்கும் விபிஎன் சேவை வழங்குநர்கள் அவர்களது வாடிக்கையாளர்களின் பெயர், இமெஇயில் ஐடி, தொலைபேசி எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை ஐந்து ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்றும், அரசுக்குத் தேவைப்படும்போது அதை கேட்கும்பட்சத்தில் கொடுக்க வேண்டும் என்று புதிய விதிமுறை ஒன்றை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு வகுத்தது. இந்த விதிமுறைகள் ஜூன் 27 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது. தற்போது சிஇஆர்டி வழங்கியுள்ள பரிந்துரையின்படி இந்த விதியானது செப்டம்பர் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. VPN வழங்குநர்களுக்கு ஆறுதல் அளித்த மத்திய அரசின் உத்தரவு..

கூடுதல் அவகாசம் வழங்க காரணம்:

டேட்டா செண்ட்டர்கள், மெய்நிகர் தனியார் சர்வர் வழங்குபவர்கள், க்ளவுட் சேவை வழங்குபவர்கள் மற்றும் விபிஎன் சேவை வழங்குபவர்கள் தங்கள் சேவையைப் பெறும் பயனாளர்களின் பெயர்கள் அவர்களது சரிபார்க்கப்பட்ட முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை சேமிப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்டவற்றிற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக 3 மாதம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

அதே நேரத்தில் சைபர் ஏஜென்சியானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏப்ரல் 28ம் தேதி அறிவித்த இணைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுவதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 25ம் தேதிக்கு நீட்டித்துள்ளது. இந்த மாற்றமானது, சுமார் 22 இணைய பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து, “ஏப்ரலில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய புதிய வழிமுறைகளை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்வதாக கடந்த திங்கள் கிழமையன்று சிஆர்இடி  மற்றும் மத்திய தகவல் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதையடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. VPN வழங்குநர்களுக்கு ஆறுதல் அளித்த மத்திய அரசின் உத்தரவு..

நிபுணர்கள் கடிதம்:

மேலும், மத்திய அரசின் புதிய விதிமுறைகள் இணையப் பாதுகாப்பு மற்றும் பயனாளர்களின் தனியுரிமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பங்குதாரர்களின் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த பொது ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து, விபிஎன் சேவை வழங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

புதிய விதிமுறைகளை விபிஎன் சேவை வழங்குபவர்களிடம் மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்திய போது, பயனாளர்களின் தரவுகளை சேமித்துவைப்பது என்பது தங்களது சேவைக்கும், பயனாளர் தனியுரிமை பாதுகாப்பிற்கு முரண்பாடாக உள்ளது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தன. விபிஎன் சேவை வழங்கும் நிறுவனங்களான எக்ஸ்ப்ரஸ் விபிஎன், நார்ட் விபிஎன் மற்றும் சர்ஃப் ஷார்க் விபிஎன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சர்வர்களை இந்தியாவில் இருந்து நீக்கிவிடுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget