மேலும் அறிய

நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!

"செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் நிச்சயமாக மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்கும் பொழுது உதவியாக இருக்கும் “

இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதியை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ‘அரசியலைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் இந்திய அரசியலமைப்பு தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரசியலமைப்பு தின நிகழ்வின் நிறைவு விழா நேற்று (சனிக்கிழமை ) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு  நீடித்த  நீதி வழங்குவதை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும் ‘ செயற்கை நுண்ணறிவு ‘ ஆச்சர்யமான வகையில் உதவும் என தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு   மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. 


நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!
வழக்குகளின் மேலாண்மை மற்றும் அவற்றின் அனுமதி விகிதங்கள் , ஆன்லைன் மூலம் சட்டங்கள் மற்றும் வழக்குகளில் தகவல்களை அறிதல்  போன்றவற்றை செயல்படுத்த தானியங்கி அல்காரிதம் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் பொழுது நீதித்துறையின் செயல்பாடுகளை  அதிகரிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது நிலையான நீதி வழங்கலை உறுதி செய்வதற்கும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்கும் வழி வகை செய்யும் என்கிறார் சட்ட அமைச்சர்   கிரண் ரிஜிஜு .


நீதிபதிகளுக்கு உதவியாக ரோபோக்கள்.! - சட்ட அமைச்சரின் ஹைடெக் யோசனை!
நீதி மன்றங்களில் எந்த வகையான உதவிகளை செயற்கை நுண்ணறிவு செய்ய போகிறது என கேட்கலாம். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஹூமனாய்ட் அல்லது செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் நிச்சயமாக மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. ஆனால் நீதிகள் வழங்கும் பொழுதி நீதிபதிகளுக்கு உதவியாக , ஒரு சார்பற்ற தீர்ப்பை வழங்குவதற்கு அவை உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இப்படி மனிதர்களின் திறனுடன் செயல்படும் செயற்கை நுண்ணறிவை நாடும் பொழுது, விரைந்து நீதி வழங்க உதவியாக இருக்கும் என்ற அமைச்சர்  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு போதுமான நீதித்துறை உள்கட்டமைப்பு முக்கியமானது என்றும் தற்போதைய அரசாங்கம், அனைவருக்கும் நீதியை எளிதாகவும் சரியான நேரத்தில் வழங்கவும் அனுமதிக்கும் வகையில் நீதிமன்ற உள்கட்டமைப்பை எளிமையாக்கியுள்ளது எனவும் தெவித்தார்,. மேலும் உள்கட்டமைப்பு தகராறுகளைத் தீர்ப்பதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது.  தேசிய நலன்களை மனதில் வைத்து வளர்ச்சிப் பாதையின் ஓட்டத்திற்கும் செலவிடுவது உத்தமம் எனவும் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
Aadhar Card New App: உங்க ஆதார புதுப்பிக்கனுமா? எங்கயும் அலையாதீங்க..உங்க பழைய ஆதார் செயலிய மட்டும் புதுசா மாத்துங்க
உங்க ஆதார புதுப்பிக்கனுமா? எங்கயும் அலையாதீங்க..உங்க பழைய ஆதார் செயலிய மட்டும் புதுசா மாத்துங்க
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
Israel Attack Lebanon: அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
Tamil Nadu Assembly : ”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
Embed widget