மேலும் அறிய

Aadhaar Mobile Number Change: ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றலாம்? தெரிஞ்சிக்கோங்க

ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு, ஆதார் மூலம் பொதுவான அடையாள எண் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கு, ஓட்டுநர் உரிமம், சிம் கார்டு, சில இடங்களில் அடையாள அட்டையாகவும் உள்ளிட்ட பல்வேறு சேவைக்காக பயன்படுகிறது.

ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்நிலையில், நம்முடைய மொபைல் எண்ணை மாற்றும் தருணம் ஏற்படும் போது, ஆதார் மூலம் சேவைகள் பெறுவதில் தடை ஏற்படும். அதனால் ஆதார் கார்டில், புதிய மொபைல் எண்ணை பதிவு செய்த பிறகே ஆதார் சேவைகளை தடையின்றி பெற முடியும்.

தற்போது, ஆதார் கார்டில் புதிய மொபைல் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

  1. முதலில்https://www.uidai.gov.in/ta/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். 
  2. என் ஆதார்/ My aadhar என்பதை கிளிக் செய்து, அதில் பதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார்  Update Aadhaar at Enrolment/Update Center என்பதை கிளிக் செய்யவும்.
  3. state அல்லது district அல்லது பின் கோடை கிளிக் செய்து தேர்வு செய்து, உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை அறிந்து கொள்ளவும்.
  4. ஆதார் மையத்துக்கு சென்று update ஃபார்மை பூர்த்தி செய்ய வேண்டும்
  5. update ஃபார்மை பெற ரூ.50 ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
  6. update ஃபார்மை சமர்ப்பித்த பிறகு, அதற்கான உறுதிச் சீட்டு மற்றும் ட்ராக் எண் வழங்கப்படும்
  7. ட்ராக் எண் மூலம், மொபைல் எண் மாற்றுவது தொடர்பான நிலையை தெரிந்து கொள்ளலாம்.
  8. ஆதாரில் 90 நாட்களில் மொபைல் எண் மாற்றப்பட்டு விடும்.


Aadhaar Mobile Number Change: ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றலாம்? தெரிஞ்சிக்கோங்க

ஆதார் தொடர்பான கூடுதல் தகவல்கள்:

மாஸ்க் ஆதார் கார்ட் முதல் எட்டு இலக்கங்களை மறைத்து, கடைசி நான்கு இலக்கங்களைக் காட்டுவதன் மூலம் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. மாஸ்க்  செய்யப்பட்ட ஆதார் எண் என்பது ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களுக்குப் பதிலாக “xxxx-xxxx” போன்ற சில குறியீடுகளுடன் வரும்.டைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். இதனை பயன்படுத்தினால் பாதுகாப்பாக உங்களது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என  UIDAI  தெரிவித்துள்ளது. 

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டினை UIDAI வலைத்தளம் மூலம் எளிமையாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதற்கு கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்றினால் போதுமானது.

படி 1 : myaadhaar.uidai.gov.in க்குச் சென்று  'Login'  வசதியை க்ளிக் செய்யவும்.

படி 2 : உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்த பிறகு , Send OTP என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

படி 3 : உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.அதனை பதிவு செய்து  'Login'  வசதியுடன் உள்நுழைய வேண்டும். 

படி 4: அதன் பிறகு  'Services' என்ற வசதியிற்குள் சென்று  'Download Aadhaar' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

படி 5 : Review your Demographics Data பிரிவின் கீழ் உள்ள  'Do you want a masked Aadhaar?'  என்னும் வசதியை க்ளிக் செய்யுங்கள்.

படி 6 : தன் பிறகு  "Download." என்னும் வசதியை பயன்படுத்தி , புதிய மாஸ்க்ட் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

படி 6 : PDF வடிவத்தில் உங்களது மாஸ்க்ட் ஆதார் கார்ட் கிடைத்துவிடும்.

படி 7 : உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை (ஆதாரில் உள்ளதைப் போல) கேபிடல் எழுத்துக்களிலும், உங்கள் பிறந்த ஆண்டையும் YYYY வடிவத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட PDF மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கோப்பைத் திறக்கலாம்.

Also read: Govt Subsidy: ஆதார் இல்லாவிட்டாலும் அரசின் சலுகைகளை பெறலாம்! வழிமுறைகள் என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget