மேலும் அறிய

Kohli Leaves T20 Captaincy: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் வீராட் கோலி!

. நீண்ட ஆலோசனைக்குபின் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது இந்த முடிவு குறித்து அவர் விரிவான விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி பொறுப்பில் கவனம் செலுத்துவதற்காகவும், டி-20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் கேட்படன் பொறுப்பை ஏற்பதாகவும், அதன் பின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குபின் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல தவறினால், டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகிவிடுவார் என்றும், துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும் ஊடங்களில் தகவல் வெளியானது. தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், இழந்த தனது பார்மை மீட்பதற்காகவுமே கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டி-20 உலககோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி இதை அறிவிப்பார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. 

இந்த தகவலை முற்றிலுமாக மறுத்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ”கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என மூன்று ஃபார்மாட்களிலும் இந்திய அணி கேப்டனாக விராட் கோலியே தொடர்வார்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில், விராட் கோலி தனது முடிவை அறிவித்திருப்பது எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மேட்களிலும் கேப்டன்சியை பகிர்ந்து அளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ உறுதியாக இருந்திருக்கும் என்பதால், கோலிக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கலாம். இந்நிலையில்தான், கோலி தனது முடிவை அறிவித்திருப்பார் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணிக்காக விளையாடுவதில் மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாகவும் வழிநடத்திச் சென்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணி கேப்டனாக நான் பொறுப்பு வகிக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உதவியாளர்கள், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் என ஒவ்வொருவரின் உதவியும் இல்லாமல் என்னால் இந்த நிலையை எட்டி இருக்க முடியாது. குறிப்பாக, இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றிகள். 

கடந்த 8-9 வருடங்களாக டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மேட்களிலும் விளையாடி வருவதும், கடந்த 5-6 ஆண்டுகளாக மூன்று ஃபார்மேட்களிலும் கேப்டன் பொறுப்பு வகிப்பதற்கும் அதிக வேலைபாடு தேவைப்படுகிறது. இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக முழுமையாக கவனம் செலுத்தும் முன், சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு டி-20 கேப்டனாக எனது முழு உழைப்பை வழங்கியுள்ளேன். இனிமேலும், டி-20 பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். 

உறுதியாக இந்த முடிவை எடுப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. எனக்கு மிகவும் நெருக்கமான ரவி அண்ணன் (ரவி சாஸ்திரி), ரோஹித் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தப் பிறகு, டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு எனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம் என முடிவு செய்துள்ளேன். இவ்விருவரும், இந்திய அணியின் தலைமை பொறுப்பு குழுவில் முக்கியமானவர்கள். மேலும் இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, தலைவர் கங்குலி மற்றும் அணி தேர்வாளர்களிடம் பேசியுள்ளேன். தொடர்ந்து இந்திய அணிக்கும், இந்திய அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட உறுதி கூறுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

GT vs RR: கில்லின் அசால்ட் சதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைடன்ஸ்
GT vs RR: கில்லின் அசால்ட் சதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைடன்ஸ்
Rishabh Pant: ரிஷப் பண்ட் அதிரடி முடிவு: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்! காரணம் என்ன?
Rishabh Pant: ரிஷப் பண்ட் அதிரடி முடிவு: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்! காரணம் என்ன?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Honda Upcoming Cars: புதுசுலாம் செட் ஆகாது..! 3 லெஜண்டரி கார் மாடல்கள், ஹைப்ரிட் ஆக ரீலாஞ்ச்.. ஹோண்டா அதிரடி
புதுசுலாம் செட் ஆகாது..! 3 லெஜண்டரி கார் மாடல்கள், ஹைப்ரிட் ஆக ரீலாஞ்ச்.. ஹோண்டா அதிரடி
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Embed widget