"நீங்க TVK தானே" போதையில் கேள்வி கேட்ட நபரால் SHOCK ஆன மாவட்ட ஆட்சியர்
கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரை பார்த்து, போதையிலிருந்த நபர் ஒருவர் "நீங்க TVK தானே" எனக் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஒரு நாள் முழுவதும் கடையநல்லூர் நகரத்தில் குடியிருந்து, ஒவ்வொரு பகுதிகளுக்காக சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் கட்டணக் கழிப்பறையை பார்வையிட்ட கலெக்டர், கழிப்பறை அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி சுத்தமாக வைத்துக் வைத்துக்கொள்ளுமாறு ஒப்பந்ததாரரிடம் உத்தரவிட்டார்.
அந்த சமயத்தில் போதையில் அங்கு வந்த நபர் ஒருவர், இங்க எதுக்கு ஐந்து ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் வசூலிக்கிறீங்க என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், அங்கிருந்த கலெக்டரை பார்த்து, "நீங்க TVK தானே" எனக் கேட்டதும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்த கலெக்டர், அங்கே உள்ள பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கலெக்டரை பார்த்து "நீங்க TVK தானே" என அந்த நாதர் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















