மேலும் அறிய

ஐபிஎல் தொடரில் என்னை தூங்க விடாமல் செய்த ஒரே கேப்டன் இவர்தான்.. நினைவுகளை பகிர்ந்த காம்பீர்!

ஐபிஎல் தொடரில் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒரே கேப்டன் ரோகித் சர்மாதான் என்று முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒரே கேப்டன் ரோகித் சர்மாதான் என்று முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் மூன்றாவது நாளிலேயே ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்தநிலையில், நேற்றைய போட்டியின்போது முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் வர்ணனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒரே கேப்டன் ரோகித் சர்மாதான் என்று தெரிவித்தார். மற்றொரு வர்ணனையாளரான தீப் தாஸ் குப்தா வர்ணனையின்போது காம்பீரிடம் ஒரு கேள்வியை கேட்டார். அதில், “ ஐபிஎல் தொடரில் நம்பமுடியாத கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனி இருந்து வருகின்றனர். இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த காம்பீர், “ இது ஒரு கடினமான கேள்வி, ஆனால் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் உள்ளது. நான் இரண்டு கேப்டன்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், நான் தேர்ந்தெடுக்கும் முதல் வீரராக ரோகித் சர்மாதான் இருப்பார். இரண்டாவது வீரர் யுவராஜ் சிங். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. இந்த இருவரைத் தவிர. ஐபிஎல் தொடரில் நாங்கள் இரண்டு கோப்பைக்கு மேல் வென்றிருப்போம் இந்த இரண்டு வீரர்கள் எங்கள் பக்கம் இருந்திருந்தால்.. 

ரோஹித்தும் நானும் ஓப்பன் செய்வோம், ராபின் உத்தப்பா 3 இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4 இடத்திலும், யுவராஜ் 5 இடத்திலும், யூசுப் பதான் 6 இடத்திலும், ஆண்ட்ரே ரசல் 7 இடத்திலும் இது மட்டும் நடந்திருந்தால் எப்படிப்பட்ட அணியாக இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். யுவராஜை எடுக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. 

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி 4 முறையும் கோப்பைகளை வென்றுள்ளனர். ஆனால், எதிரணி கேப்டனாக தனக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்தது ரோகித் சர்மா மட்டும்தான். நான் வேறு யாருக்காகவும் அவ்வளவு திட்டங்கள் போடவில்லை.” என்று தெரிவித்தார். 

ஏழு ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடிய கம்பீர், 2012 மற்றும் 2014 இரண்டு கோப்பைகளை வென்றுள்ளார்.

ஐபிஎல் கோப்பை வரலாறு:

ஐபிஎல் தொடரனாது இதுவரை 15 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் அதிகபட்மாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. 2013,2015,2017,2019,2020 ஆகிய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் தலைமையில் கோப்பையை வென்றது. அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 

இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. நான்கு முறையும் கேப்டனாக தோனியே இருந்துள்ளார். இந்த அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 

இதற்கு அடுத்து, 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த இரு முறையும் கம்பீர் கொல்கத்தா அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget