Pele: மறைந்தார் கிங் பீலே! கால்பந்து பேரரசரின் பிறப்பு, வாழ்க்கை, விளையாட்டு, வரலாறு… முழு பயோக்ராஃபி!
கால்பந்து விளையாட்டில் அவரது தந்தைதான், அவருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். ஒரு கால்பந்து வாங்க கூட முடியாத வறுமை இருந்த நிலையில், காகிதத்தில் செய்த பந்தை வைத்து விளையாடுவார்கள்.
![Pele: மறைந்தார் கிங் பீலே! கால்பந்து பேரரசரின் பிறப்பு, வாழ்க்கை, விளையாட்டு, வரலாறு… முழு பயோக்ராஃபி! Pele Biography Early life Age Career Family Death and other details Pele: மறைந்தார் கிங் பீலே! கால்பந்து பேரரசரின் பிறப்பு, வாழ்க்கை, விளையாட்டு, வரலாறு… முழு பயோக்ராஃபி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/52b8b4e32033dcef2263961c12649cd31672379154621109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கால்பந்து ஜாம்பவான் பீலே நேற்று மதியம் மறைந்த செய்தி கால்பந்து உலகை உளுக்கியுள்ளது. பிரேசிலில் உள்ள சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில், வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். கால்பந்தை கட்டி ஆண்ட பேரரசரான இவர் குறித்த அடிப்படை தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். பீலே பிறந்தது, 23 அக்டோபர் 1940 ஆகும். அவர் தனது 82 வயதில் பிரேசிலில் 30 டிசம்பர், 2022 அன்று மறைந்தார். பிரெசிலின், மினாஸ் ஜெரைஸ் மாநிலம், ட்ரெஸ் கோராசெஸ்-இல் பிறந்த அவரது, முழு பெயர் எடிசன் அரான்டெஸ் நாசிமெண்டோ ஆகும். 1 அக்டோபர் 1977 தேதி கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
பீலேவுக்கு கண்டுபிடிப்பாளரும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான தாமஸ் ஆல்வா எடிசனின் ஞாபகமாக எடிசன் என்று பெயரிடப்பட்டது. பீலே என்பது அவருக்கு புனைப்பெயராக கிடைத்தது. இது தவிர அவரை பேரரசர், கிங், கிங் பீலே என்றெல்லாம் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். பீலே சாவோ பாலோவில் வளரும்போது வறுமையின் நாட்களைக் கடந்து வந்துள்ளார். கால்பந்து விளையாட்டில் அவரது தந்தைதான், அவருக்கு தெரிந்த அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அவர்களால் ஒரு கால்பந்து வாங்க கூட முடியாத வறுமை இருந்தது, அதனால் அவர்கள் காகிதத்தில் செய்த பந்தை வைத்து விளையாடுவார்கள். பீலே உள்ளூர் டீக்கடைகளிலும் பணியாற்றியுள்ளார்.
பிரெசிலின் பொக்கிஷமான பீலே
பீலே தனது இளமை பருவத்தில் உள்ளரங்க லீக்குகளில் விளையாடினார், இறுதியில் 15 வயதில் சாண்டோஸ் எஃப்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 16 வயதிற்குள், பிரேசிலிய லீக்கில் அதிக கோல் அடித்தவராக மாறினார். பிரேசில் தேசிய தரப்பிலிருந்து பீலேவுக்கு அழைப்பு வந்தது. மான்செஸ்டர் யுனைடெட் போன்ற வெளிநாட்டு கிளப்புகள் பீலேவை கையொப்பமிடாதபடி பிரேசில் ஜனாதிபதி பீலேவை தேசிய பொக்கிஷமாக அறிவித்தார்.
கால்பந்திலிருந்து ஓய்வு
பின்னர் அவரது கால்பந்து வாழ்க்கையில், பீலே தொழில்முறை விளையாட்டுகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்தார். 19 நவம்பர் 1969 அன்று ரியோ டி ஜெனிரோவின் மரக்கானா மைதானத்தில் உள்ள வாஸ்கோடகாமாவில் பீலே தனது குறிப்பிடத்தக்க 1000வது கோலை அடித்தார். 1977 ஆம் ஆண்டில் பீலே தனது கால்பந்து வாழ்க்கையை முடித்துக்கொண்டு நியூயார்க் காஸ்மோஸிற்கு அமெரிக்க பட்டம் வாங்கித்தந்த பிறகு ஓய்வு பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
பிரேசில் கால்பந்து வீரரான பீலே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு பல குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். 1970 களில் பீலே, இடதுசாரி அரசியல் கைதிகளுடன் அனுதாபம் கொண்டிருந்தார் என்ற சந்தேகம் இருந்ததால், சர்வாதிகார பிரேசிலிய அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற பிறகு பீலே கால்பந்து மற்றும் விளையாட்டுக்கான சிறந்த தூதராக இருந்தார். 1992 இல் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஐநா தூதராக பீலே நியமிக்கப்பட்டார். யுனெஸ்கோவின் நல்லெண்ண தூதராகவும் பீலே நியமிக்கப்பட்டுள்ளார். பீலே தனது தலைமுறையின் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், ஒரு சாந்தமான மனிதராகவும் இருந்தார், அவர் தனது புகழையும் கௌரவத்தையும் நேர்மறையான விஷயங்களுக்காக பயன்படுத்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)