மேலும் அறிய

Harbhajan Singh: ‛இடையூறுக்கு மன்னிக்கவும்...’ பாலத்தில் நின்று ஹர்பஜன் சிங் எம்.பி., போட்ட பதிவு!

கிரிக்கெட் வீரராக மிகவும் ஆக்ரோஷமாக மைதானத்தில் செயல்படுபவர் ஹர்பஜன். அரசியலிலும் அவரது செயல்பாடு ஆக்ரோஷமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய ஆம் ஆத்மி கட்சியின் நியமன எம்.பி.,யுமான ஹர்பஜன் சிங், சமீபவத்தில் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றதை நாம் அனைவரும் அறிவோம். மைதானத்தில் வலம் வந்த ஹர்பஜன் சிங், முதன்முறையாக மக்கள் மன்றமான பாராளுமன்றத்தில் நுழைந்த போது அந்த தருணத்தை அவர் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர். 

 

உறுதிமொழி ஏற்று, எம்.பி.,யாக பொறுப்பேற்றதுமே, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டு விட்டார் ஹர்பஜன். மலைசார்ந்த பகுதியில் உயர்ந்த பகுதியில் பாலம் மீது அமர்ந்து பருவமழை காலத்தை ரசித்துக் கொண்டே தேநீர் அருந்தி, தனது மகிழ்வான அனுபவத்தை அவர் அப்போது பகிர்ந்திருந்தார். 

 

இந்நிலையில் மறுநாளான இன்று மற்றொரு பதிவை அவர் செலுத்தியுள்ளார். அதில் கடல் நடுவே அமைக்கப்பட்ட நீண்ட பாலத்தின் நடுவே நின்று அவர் எடுத்துள்ள போட்டோவில், ‛உங்கள் பார்வைக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு மன்னிக்கவும்’ என்று குறிப்பிட்டு அவர் அந்த பதிவை வெளியிட்டுள்ளார். 

 

கிரிக்கெட் வீரராக மிகவும் ஆக்ரோஷமாக மைதானத்தில் செயல்படுபவர் ஹர்பஜன். அரசியலிலும் அவரது செயல்பாடு ஆக்ரோஷமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நேர அரசியலில் இறங்கும் முன், ஊர் சுற்றி வந்துவிடலாம் என்பதால் தான், ஹர்பஜன் தன்னை புத்துணர்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும், விரைவில் அதற்கான ஆயத்தத்தோடு களமிறங்குவார் என்றும் தெரிகிறது. 

பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சியைப்பிடித்த ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து அங்கு தனது கட்சியை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த காலங்களில் பிரபலங்களை வைத்து தனது கட்சியை வளப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியின் அதே பாஃர்முலாவை தான், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் கையில் எடுத்துள்ளது. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்ததைப் போல, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை கையில் எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. 

அக்கட்சியின் சார்பில் நியமன எம்.பி.,யாக ஹர்பஜன் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் இன்னும் இணையப் போகிறதாம் ஆம் ஆத்மி. ஆம் ஆத்மியின் இது போன்ற மூவ், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியாக உள்ளது. 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget