சேலம் ராஜகணபதி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு - வசூல் எவ்வளவு?
நான்கு உண்டியல்களில் 14,31,441 ரூபாயும், 11 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
சேலம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ராஜகணபதி திருக்கோவில் சேலம் சின்ன கடை வீதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் ராஜ கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நித்திய பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் காணிக்கைகள் செலுத்தப்பட்டு வருகிறது.
ராஜகணபதி திருக்கோவிலில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ காலங்களில் ராஜகணபதி திருக்கோவிலில் இருந்த நான்கு உண்டியலில் காணிக்கைகள் சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது. தருமபுரி உதவி ஆணையாளர் உதயகுமார் தலைமையில் ராஜகணபதி கோவில் பொறுப்பில் உள்ள உதவி ஆணையாளர் ராஜா முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. நான்கு உண்டியல்களில் 14,31,441 ரூபாயும், 11 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்கா டாலர் இரண்டு நோட்டுகளும், கத்தார் ரியால் நான்கு நோட்டுக்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த உண்டியல் காணிக்கையை எண்ணும்போது அறங்காவல் குழு தலைவர் சோனா வள்ளியப்பா அறங்காவலர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets