TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Tamil Nadu School Reopening: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், திறப்பு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. மாநில பள்ளிக் கல்வித்துறை வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை
முன்னதாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளன. சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் தினத்திலேயே பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால் மாணவர்கள் தாமதமின்றிப் பாடங்களைக் கற்கத் தொடங்க முடியும்.
பள்ளிகள் திறப்பில் மாற்றமா?
ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கத்தைப் பொறுத்தே பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றங்கள் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு கல்வி நாட்காட்டியில் திட்டமிட்டபடி ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வெயிலின் தாக்கம் ஜூன் மாதத் தொடக்கத்தில் மிக அதிகமாக இருந்தால், அது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், தற்போதைய நிலையில் ஜூன் 4-ஆம் தேதியே உறுதி என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்
பள்ளி திறப்பதற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர் சேர்க்கை மற்றும் பாடத்திட்டத் திட்டமிடல் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் பின் வரும் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்கப் பள்ளிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்களும், பெற்றோர்களும் கோடை விடுமுறைப் பயணங்களை முடித்துக்கொண்டு, புதிய கல்வியாண்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும், தேர்வுகளுக்குத் தயாராகவும் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
























