மேலும் அறிய

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பதில் சீனியர்களே அடித்துக் கொள்வதாகவும், தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்து அனுப்பி வைத்த பட்டியலில் ராகுல்காந்தியே நேரடியாக தலையிட்டு சில பெயர்களை வெட்டி ஒட்டும் வேலையை பார்த்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஆவதன் பின்னணியில் காங்கிரஸ் தலைமையின் மாஸ்டர் ப்ளான் இருப்பதாகவும் சொல்கின்றனர்.

தொகுதி பங்கீட்டிலேயே விடாப்பிடியாக இருந்த காங்கிரஸ், நீண்ட இழுபறிக்கு பிறகு திமுகவிடம் 28 தொகுதிகளை கேட்டு வாங்கியது. தொகுதி டீலிங்கை முடித்தாலும் வேட்பாளர்கள் யார் என்பதில் இழுபறி போய்க் கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கி விட்ட நிலையில், காங்கிரஸில் நீயா நானா போட்டி நடந்து வருவதாக சொல்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கொடுப்பதாக கட்சியினர் முனுமுனுக்கின்றனர். மற்றொரு பக்கம் சீனியர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதாக தெரிகிறது. இப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் 3, 4 பேர் என அதிகார மோதல் இருப்பதால் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.


இந்த விவகாரங்களை எம்.பி ஜோதிமணியும் வெளிப்படையாகவே உடைத்திருந்தார். அவரது பதிவில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” என சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குவதற்கான முன்பே வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சீட் ஒதுக்கீட்டில் உள்ளடி வேலை நடக்கும் விவகாரம் தலைமை காதுகளுக்கு சென்றதும் ராகுல்காந்தியே தலையிட்டு பஞ்சாயத்தை முடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

தமிழக காங்கிரஸில் இருந்து அனுப்பிய பட்டியலில் ராகுலே சில திருத்தங்களை செய்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. 20க்கும் அதிகமான தொகுதிகளுக்கு டிக் அடித்துவிட்ட போதிலும் 7, 8 தொகுதிகளுக்கு இன்னும் பஞ்சாயத்து போய்க் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். அதனால் இப்போதே வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் எங்களுக்கும் சீட் வேண்டும் என டெல்லிக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதால், வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நாள் அருகில் வரும் போது அறிவித்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என தலைமை கணக்கு போட்டுள்ளதாம்.

இல்லையென்றால் புதுச்சேரியில் நடந்தது போல் முதலில் யாருக்கு வேண்டுமோ வேட்பு மனு தாக்கல் செய்யவிட்டு இறுதியில் வேட்பாளர்களை அறிவித்து மற்றவர்களை வாபஸ் வாங்க சொல்லலாம் என்ற ஐடியாவும் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் சோனியா காந்தி தான் வேட்பாளர்களை தேர்வு செய்தார் என்று சொன்னால் நிலைமை கட்டுக்குள் இருக்கும் என நினைத்து அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வரும் வரை வேட்பாளர்களை அறிவிக்காமல் காத்திருந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆனால் காங்கிரஸில் நடக்கும் இந்த குழப்பம் திமுக தலைமைக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடாப்பிடியாக இருந்து 28 சீட் வாங்கியும் அதில் திருப்தி இல்லை கிரிஷ் சோடங்கர் பேசியிருந்தார். அதுவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடுப்பை கொடுத்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா என தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வரும் நிலையில் வேட்பாளர்களை அறிவிக்கவே காங்கிரஸ் திணறி வருவது மேலும் கடுப்பை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. நேற்று திருச்சியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் கை சின்னத்தில் வாக்களியுங்கள் என வேட்பாளர்களே இல்லாமல் ஓட்டு கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் காங்கிரஸின் இந்த இழுபறியால் முதலமைசரும் அதிருப்தியில் இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
"நம் ஏரி, நம் உயிர்நாடி! குறிச்சி கிராம மக்களின் அசாத்திய கூட்டு முயற்சி... மீண்டெழுந்தது 383 ஏக்கர் நீர்நிலை!"
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Embed widget