மேலும் அறிய

Sri Ramakrishna Jayanthi : இராமகிருஷ்ண பரமஹம்சர் 187வது பிறந்தநாள்: அவரது பொன்மொழிகள் இதோ..

ராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் ஒருவர் விவேகானந்தர் என்பது அனைவரும் அறிந்ததே

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியும், துறவியும், மத போதகருமான ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  சிக்கலான ஆன்மீகப் போதனைகளை எளிய சொற்களாக மக்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாக்கினார். இந்து சந்திர நாட்காட்டியின் படி, அவரது பிறந்த நாள் பால்குண மாதத்தின் சுக்ல பக்ஷத்தில் த்விதிய திதியில் வருகிறது. இந்த ஆண்டு அவரது 187வது பிறந்தநாள்.

ராமகிருஷ்ணர் 1836ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கமர்புகூர் கிராமத்தில் குதிராம் சட்டோபாத்யாய் மற்றும் சந்திரமணி தேவிக்கு மகனாகப் பிறந்தார். ராமகிருஷ்ணாவின் பெற்றோருக்கு அவர் வளர்ச்சி எப்படி இருக்கும் என முன்கூட்டியே தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

ராமாயணம், மகாபாரதம், பாகவத புராணம் போன்ற சமய நூல்களை நன்கு அறிந்தவர் அவர். தற்காலக் கல்வி முறை ஆன்மீகம், வாழ்வியல் நடைமுறைகளைப் பயிற்றுவிக்காமல் வெறுமனே லாபம் எப்படி ஈட்டுவது என்பதை மட்டுமே கற்பிப்பதாக அமைந்துள்ளது என அவர் கருதினார்.  ராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் ஒருவர் விவேகானந்தர் என்பது அனைவரும் அறிந்ததே

ராமகிருஷ்ணர் பொன்மொழிகள்

"மனம்தான் ஒருவரை ஞானியாகவோ அல்லது அறியாமையாகவோ, கட்டுண்டவராகவோ அல்லது விடுதலையாக்கவோ செய்கிறது."

மனித வாழ்க்கையின் குறிக்கோள், 'இறுதி யதார்த்தத்தை' உணர்ந்துகொள்வதாகும், அது மட்டுமே மனிதனுக்கு உயர்ந்த நிறைவையும் நித்திய அமைதியையும் கொடுக்க முடியும். இதுவே அனைத்து மதங்களின் சாரம்.

இரண்டு வகையான மக்கள் மட்டுமே சுய அறிவை அடைய முடியும்: கற்றலில் சிறிதும் சிக்காதவர்கள், மற்றொருவர் அனைத்து சாஸ்திரங்களையும் படித்துவிட்டு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்ந்தவர்கள்.

உங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மையானது, மற்றவர்களின் நம்பிக்கை பொய்யானது என்று ஒருபோதும் நம்பாதீர்கள். உருவம் இல்லாத கடவுள் உண்மையானவர் என்பதையும், உருவம் கொண்ட கடவுளும் உண்மையானவர் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். பின்னர் எந்த நம்பிக்கை உங்களை ஈர்க்கிறதோ அதை பின்பற்றுங்கள்.

மனத் தூய்மை என்பது ‘இறுதி யதார்த்தத்தை’ அடைவதற்கு இன்றியமையாத நிபந்தனையாகும்; உண்மையான தூய்மை என்பது காமம் மற்றும் பேராசையிலிருந்து விடுபடுவது. வெளிப்புற அனுசரிப்புகள் அத்தனையும் இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்தவை.

புனித நூல்களில் பல நல்ல வாசகங்கள் காணப்படுகின்றன, ஆனால் அவற்றைப் படிப்பதால் ஒரு மதம் மாறாது.

ஆன்மீக நடைமுறைகள் மூலம், மனிதன் தனது தீய போக்குகளை வெல்ல முடியும், மேலும் தெய்வீக அருளால் மிக மோசமான பாவியையும் மீட்க முடியும். எனவே, கடந்த கால தவறுகளை நினைத்துக் கவலைப்படாமல், கடவுளைச் சார்ந்து வாழ்வில் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget