மேலும் அறிய

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாவட்ட அகில பாரதி ஐயப்ப தர்ம பிரச்சார சபா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பாக 11ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் 18 வகையான பூக்களால் உற்சவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கரூர் மாவட்டம், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா நடத்தும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 11ஆம் ஆண்டு கலியுக வரதன் ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) உற்சவர் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வாசவி மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ மகா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இன்று புஷ்பாஞ்ச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 18 வகையான  அரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, அரளி, ரோஸ், துளசி, செவ்வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட 18 வகையான பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் உற்சவருக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

கரூர் மாவட்ட அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா நடத்தும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பதினொன்றாம் ஆண்டு கலியுக வரதன் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் உற்சவர் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாவட்ட அகில பாரதி ஐயப்ப தர்ம பிரச்சார சபா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


கரூர் செவ்வந்திபாளையம் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா- ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் கிராமம், செவந்தி பாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ தங்காயி, ஸ்ரீ மாசி பெரியசாமி கோவில் வீட்டு ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குட நன்னீர் நாட்டுப் பெருவிழா. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு நன்னீராட்டுப்பெருவிழா நடைபெற்று வருகிறது.


ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ பெரிய காண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செவந்தி பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஊம காளியம்மன் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

பின்னர் ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

செவ்வந்திபாளையம் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன், ஸ்ரீ தங்காயி, ஸ்ரீ மாசி பெரிய சுவாமி கோவில் வீடு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை செவந்தி பாளையம் ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் காலை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget