மேலும் அறிய

கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு

27ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

கனவில் வந்து சொன்ன கரூர் தாந்தோன்றி மலை பெருமாளுக்கு 3அடி நீளம், 2 அடி உயரம் கொண்ட காலணியை ஒவ்வொரு வலமாக கொண்டு வந்து காணிக்கை செலுத்தி பக்தர் சிறப்பு வழிபாடு நடத்தினார். கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் மலையோடு மலையாக தானாக தோன்றிய, தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி என்னும் குடைவரைக் கோவில் உள்ளது.


கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோயில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பெரு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் 05.07.2022 நடைபெற உள்ளது.


கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு

புரட்டாசி பெருவிழாவில் பக்தர்கள் வேண்டுதலாக பல்வேறு பொருட்களை காணிக்கை செலுத்துகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அருகே சின்னத்தம்பிபட்டியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முன்னோர்கள் பெருமாளுக்கு காலணி செய்து அதை காணிக்கை செலுத்தி வந்துள்ளனர். இவர்களின் வகையாறாவை சேர்ந்தவர்களில் (சொப்பனம்) கனவில் தோன்றும் இறைவன் தனக்கு தேவையான காலணி இந்தளவில் செருப்பு வேண்டும் என கேட்பதாகவும் அதை செய்து காணிக்கை செலுத்துவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.


கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு

வழக்கம் போல இந்த ஆண்டு அருண்குமார் என்பவரின் கனவில் தோன்றிய இறைவன், 3 அடி நீளம், 2 அடி உயரம் அளவில் பெரிய காலணி  செய்து செலுத்துமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காலணியை தயார் செய்த அவர்கள் அவர்களது கோவிலில் இரண்டு தினங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து, அங்கிருந்து வீட்டிற்கு ஒருவர் என மேளதாளங்களுடன் ஊர் ஊராக சென்று கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தவுள்ளனர்.


கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு 

முன்னோர்கள் வழிபடி கனவில் வந்ததை காணிக்கை செலுத்துவது எங்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

கரூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பூக்குடலை திருவிழா

கரூரில், இறைவனுக்கு பறித்த பூக்களை பட்டத்து யானை தட்டிவிட்டதால் கோபமுற்ற எரிபத்தநாயனார் யானையின் தும்பிக்கையை துண்டித்த ஆண்மீக வரலாற்று செயல் விளக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல்விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது.


கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு

கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் வளாகத்தில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது. 64-நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இறைவன் ஈசனுக்கு சாட்டுவதற்கு நந்தவனத்தில் பூக்களை பறித்து வரும் போது புகழ் சோழானின் பட்டத்து யானை மதம் பிடித்தவாறு வந்து எரிபத்த நாயனாரின் கையில் பூக்குடலையில்வைத்திருந்த பூக்களை தட்டிவிட்டது. இதனால் கோபமடைந்த எறிபத்த நாயனார் மழு எனப்படும் கோடாலியால் யானையின் தும்பிக்கையை துண்டித்தார்.


கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னன்  புகழ் சோழன் இறைவனுக்கு பறித்த பூக்களை தட்டிவிட்டதால் தானே அதற்குமுழு பொறுப்பு என கூறி தனது உடைவாலை உருவி தனது தலையை துண்டிக்க கூறினார். இதனை அறிந்து அங்கு தோன்றிய இறைவன் எறிபத்த நாயனாரின் பக்தியையும், மன்னனின் எண்ண ஓட்டங்களையும் அறியவே இத்திருவிளையாடலை நடத்தியதாக கூறி யானையை உயிர்ப்பித்தார். இந்த வரலாற்று பின்னனி கொண்ட ஆன்மீக செயல் விளகத்தை தத்ரூபமாக சிவனடியார்கள் நடித்து காட்டிய இத்திருவிழாவில் ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் மற்றும் பக்தர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இறைவனின் திருவிளையாடலை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்கள் பூக்குடலையில் கொண்டு வந்த பூக்களுடன் கரூர்நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று இறுதியில் பசுபதீஸ்வரா ஆலயத்தை வந்தடைந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget