![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சங்கனூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
வெள்ளியணை தென்பாகம் பள்ளசங்கனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
![சங்கனூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா Karu sanganur Arulmiku Sri Mariamman Temple Ashtabandana Maha Kumbabishek festival TNN சங்கனூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/7b3c44b5ab7c0144b8f7919fef5a51e71693810475651113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம், வெள்ளியணை தென்பாகம் பகுதி பள்ள சங்கனூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைக்க பெற்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி என இரண்டு கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு மேள தாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்தின் அச்சகர் கோபுர கலசம் வந்தடைந்தார். வான வேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு இரண்டு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
மூலவர் ஸ்ரீ மாரியம்மன் சுவாமிக்கும் இரண்டு காலையாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷே விழா நடைபெற்று , கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டு சிறப்பான முறையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
கரூர் வெள்ளியணை தென்பாகம் பள்ளசங்கனூரில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)