மேலும் அறிய

நீங்கள் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் உள்ளே..! வரதராஜ பெருமாள் கோவில் தேரை பற்றி தெரியுமா ?

kanchipuram perumal kovil ther : காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் தேர் பற்றி தெரியுமா? சுமார் 79 அடி உயரமும்  13 அடுக்குகளையும் கொண்டது

பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ள கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கோயில்களில் ஒன்றாக, உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் புகழ்  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்   கோயில் உள்ளது.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்  வருட முழுவதும் விழாக்களால் நிறைந்த  கோயிலாக உள்ளது.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்,  200 நாட்களுக்கு குறையாமல்  உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.


நீங்கள் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் உள்ளே..! வரதராஜ பெருமாள் கோவில் தேரை பற்றி தெரியுமா ?

வரதராஜ பெருமாள்  கோயிலில் நடைபெறும்  மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக  வைகாசி பிரம்மோற்சவம் உள்ளது. வைகாசி பிரம்மோற்சவ விழாவின் பொழுது,ஏழாவது நாள் உற்சவம் நடைபெறும் நாள் அன்று திருத்தேர் உற்சவம் விமர்சையாக நடைபெறும்.இந்த செய்தி தொகுப்பில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் திருத்தேர் தொடர்பான சுவாரசிய தகவல்களை பார்க்க உள்ளோம்.

திருத்தேர்

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் பகுதியில் 1268 ஆண்டு பிறந்தவர் ஸ்ரீ வேதாந்த தேசிகர். இராமனுசரின் தத்துவங்களைப் பரப்புவதையே முழுப்பணியாகக் கருதியவர். 101 ஆண்டுகள் வேதாந்த தேசிகர் உயிர் வாழ்ந்துள்ளார். வேதாந்த தேசிகர்  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பல்வேறு,  பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.  அவரது வழித்தோன்றல்களில்  வந்தவர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரை   பக்தர்களுடன் இணைந்து உருவாக்கியதாக,  நம்பப்படுகிறது.  தேர் உற்சவம் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து   நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் என  நம்பப்படுகிறதுநீங்கள் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் உள்ளே..! வரதராஜ பெருமாள் கோவில் தேரை பற்றி தெரியுமா ?

தேரின் பிரம்மாண்டம் என்ன ?

வரதராஜ பெருமாள்  கோயில் திருத்தேருக்கு  6 சக்கரங்கள் உள்ளன,  சுமார் 65 டன் எடையுள்ள  பிரம்மாண்ட தேராக உள்ளது. நான்கு சக்கரங்கள் இரும்பு சக்கரமாக  பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.  சுமார் 79 அடி உயரமும்  13 அடுக்குகளையும் கொண்ட பெயராக உள்ளது.  அகலம் சுமார் 35 அடி உள்ளது. தேர் முழுவதும்  பெருமாளின் 9 அவதாரங்களும்  மர சிற்பமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.  தேவதைகளின் சிற்பங்கள்,  விநாயகர் அம்மன் போன்ற கடவுள்களின் சிற்பங்களும் தேரை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீங்கள் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் உள்ளே..! வரதராஜ பெருமாள் கோவில் தேரை பற்றி தெரியுமா ?

தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரம்மாண்ட தேர்களில் ஒன்றாக இந்த தேர் விளங்குகிறது. இந்த தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் வசதியும்  இருப்பது கூடுதல் சிறப்பு அம்சம். தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரம்மாண்ட தேர்களில்  பீடம் வரை மட்டுமே  மரத்தால் வடிவமைக்கப்படும்,  அதன் பிறகு மூங்கில் அல்லது சவுக்கு கட்டைகள் மூலம் கட்டப்படும்.ஆனால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெயர் முழுவதும் மரத்தால்  செய்யப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பம்சம் (  இது போன்ற  மரத்தால் கட்டமைக்கப்பட்டசிறிய தேர்கள் உள்ளன ஆனால் பெரிய தேர்களில், மரத்தால்   கட்டமைக்கப்பட்டிருப்பது காஞ்சிபுரத்தில் தான் )

1930-களில் நடந்த  துயர சம்பவம்

ஒரு காலத்தில் இதைவிட பிரம்மாண்டமாகவும்,  உயரமாகவும் இருந்த    திருத்தேர்.  1930 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ( 1937 ஆண்டு நடந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர் ) தீ விபத்தில்  தேர்  தீயில் இருந்து நாசமாயின.  திருத்தேர்  பீடம் வரை அப்போது நடந்த தீ விபத்தில் எரிந்தது.  அப்பொழுது இதைவிட  பல அடி உயரமாகவும்,  தேரில் 64 கலைகளைக் குறிக்கும் வகையில் 64 கம்பங்களும் இருந்துள்ளது. அதேபோன்று அப்பொழுது இருந்த தேரில் சந்தன மரத்தில் செய்யப்பட்ட கம்பம் ஒன்று இருந்ததாகவும்,  திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த சந்தன மரத்தை,  இழைத்தால் அடுத்த சில நாட்களுக்கு சந்தனம் வாசம் வரும்.  இதுவே வாசனை திரவியமாக  இருந்து வந்ததாக  நம்பப்படுகிறது.  அதன் பிறகு மீண்டும் கட்டமைக்கப்பட்ட தேரில்,  அதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளது

பெருமாள் நினைத்தால்தான்

தேரில் பெருமாள் ஒரு முறை ஏறிவிட்டால்,  அவர் நினைக்கும் பொழுதுதான்  மீண்டும் தேர் நிலைக்கு வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  அந்த வகையில் 1940-ஆம் ஆண்டு  தேர்வு உற்சவத்தின்போது நடைபெற்ற ஒரு விபத்தின்பொழுது, மூன்று மாதங்கள் வரை தேர்  இப்பொழுது சங்கர மடம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து  "க்ரைன்" உதவியுடன்  சக்கரம் பொருத்தப்பட்ட பிறகு தேர் ,  நிலைக்கு சென்றுள்ளது. ஒரு முறை சாமி   தேரில் ஏறிவிட்டால்,  தேர் நிலைக்கு வரும் வரை கீழே இறங்க மாட்டார். சில நாட்கள் 10 நாட்கள் வரை  ஊர்வலமாக சென்றதாக, வயதானவர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget