மேலும் அறிய
2 கோல்கள் அடித்து மிரட்டிய அர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி!
பெரு நாட்டின் கால்பந்து அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவின் ஜாம்பவானான மெஸ்ஸி மிரட்டினார்.

மெஸ்ஸி
1/6

2026 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் நேற்று முன்தினம், நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அணியுடன் பெரு அணி மோதியது.
2/6

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜென்டினா அணி அரை ஆட்டத்தின் முடிவில் 2 கோல்களை அடித்து முன்னிலை வகித்திருந்தது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல்களை அடித்தார்.
3/6

அடுத்த பகுதி ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளும் மாறி மாறி கோலுக்குள் பந்தை தள்ள போராடிக்கொண்டிருந்தன. இரண்டாவது பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கமுடியாமல் திணறின.
4/6

எனினும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆர்டிக் கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.மெஸ்ஸி அடித்த கோல் ஆப் சைடு பால் என நடுவரிடம் பெரு அணியின் கேப்டன் பெட்ரா கல்லெஸ் முறையிட்டார்.
5/6

பிறகு கோலை ரீப்பிளே செய்து பார்த்த நடுவர்கள், கோல் ஆப் சைடு என தீர்ப்பு வழங்கியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மறுபுறம் பெரு அணியின் நட்சத்திர வீரர் குரேரோ அதிரடியாக விளையாடினார்.
6/6

இருப்பினும் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. மெஸ்ஸியின் அதிரடியால் வெற்றிபெற்றது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி தற்போது இன்டெர் மியாமி அணிக்காக விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 Oct 2023 07:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion