மேலும் அறிய

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு" பகீர் கிளப்பிய ஜோதிமணி! சீனுக்கு வந்த ராகுல்

தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடும் இல்லாமல் உட்கட்சி பிரச்னை பூதாகரமாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு புகாரை அடுக்கிய நிலையில், உடனடியாக ஆக்ஷனில் இறங்கியுள்ளது காங்கிரஸ் தலைமை.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் உட்கட்சி பிரச்னை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. உட்கட்சி பிரச்னையில் கூட்டணியினர் தலையிடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், எம்.பி மாணிக்கம் தாகூரும் சொல்லியிருந்தனர். இந்தநிலையில் சொந்த கட்சி தொடர்பாகவே புகார்களை அடுக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் எம்.பி ஜோதிமணி.

அதில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.  தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.  கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை  நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை  அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ,ஒரு பேராபத்தை,மதவாத, பிரிவினைவாத,வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.  எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து,பெருந்தலைவர் காமராசர்,பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை,மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச்  சூழலில், எதிர்நோக்கியுள்ள  தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.  ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை  சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை,ஒவ்வொரு ஊரிலும்  பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத,பிரிவினைவாத சூழ்ச்சிக்கு  அடிபணியாமல் சமூக நீதி,சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு  மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.  தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான  அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம்,மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின்,அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ம்பி. ஜோதிமணி எழுப்பியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜோதிமணியிடம் கருத்து கேட்டுள்ளோம். பிரச்சனைகள் குறித்து அவர் எங்களிடம் தெரிவித்திருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் வெற்றிக் கொண்டாட்டம்.. பேருந்துநிலையத்தில் ரவுண்ட் அடித்து ஸ்வீட் கொடுத்த த.வெ.க..,வினர் !
சிவகங்கையில் வெற்றிக் கொண்டாட்டம்.. பேருந்துநிலையத்தில் ரவுண்ட் அடித்து ஸ்வீட் கொடுத்த த.வெ.க..,வினர் !
TVK ADMK Alliance: செம ட்விஸ்ட்! விஜய்க்கு தளபதியாக மாறுகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுக - தவெக கூட்டணி?
TVK ADMK Alliance: செம ட்விஸ்ட்! விஜய்க்கு தளபதியாக மாறுகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுக - தவெக கூட்டணி?
ஏசி + ஃபேன்! இப்படி யூஸ் பண்ணா கரண்ட் பில் பாதியா குறையும்.. டிப்ஸ் இதோ..
ஏசி + ஃபேன்! இப்படி யூஸ் பண்ணா கரண்ட் பில் பாதியா குறையும்.. டிப்ஸ் இதோ..
ABP Nadu Top 10, 5 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 5 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
Modi on UAE Attack: 'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
Thirumavalavan:
Thirumavalavan:"இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவு!" திருமா கொடுத்த ட்விஸ்ட்! தவெகவுடன் கூட்டணி?
Modi Vs Rahul: “மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
“மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
Embed widget