மேலும் அறிய
Madurai Chithirai Thiruvizha : மதுரை குலுங்க வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!
Madurai Chithirai Thiruvizha : லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் முழங்க பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் .

கள்ளழகர்
1/8

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
2/8

வைகை ஆற்றில் கள்ளழகரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
3/8

பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
4/8

மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் வைகையில்.
5/8

மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வுப் பணிகள் மேற்கொண்டபோது.
6/8

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.
7/8

வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது.
8/8

பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
Published at : 23 Apr 2024 09:17 AM (IST)
Tags :
@maduraiமேலும் படிக்க
Advertisement
Advertisement