மேலும் அறிய
Singara chennai 2.0 : நம்ப மேயரா இது..? இத்தாலியில் சென்னை மாநகரின் மேயர் பிரியா!
சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டிய புதிய திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை அறிவதற்காக, மேயர் பிரியா வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இத்தாலியில் சென்னை மேயர் பிரியா
1/6

சென்னையில் நாள்தோறும் டன் கணக்கில் தேங்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
2/6

இதற்காக திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேயர் பிரியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
3/6

இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார் மேயர் பிரியா.
4/6

அப்போது, அந்த தொழில்நுட்பம் செயல்படும் விதம், சென்னையில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் மேயர் கேட்டறிந்தார்.
5/6

இத்தாலியை தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிலும் மேயர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது
6/6

இதையடுத்து, வரும் 24ம் தேதியன்று இந்த குழு சென்னை திரும்புகிறது. தொடர்ந்து, சென்னையின் புவியியல் அமைப்புக்கு ஏற்ப, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை மாநகராட்சியில் அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது
Published at : 20 Jun 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















