மேலும் அறிய
Rasmalai : ரசமலாய் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த மாதிரி செய்து பாருங்க!
Rasmalai : பண்டிகை நாட்களில் இந்த அருமையான ரசமலாயை செய்து அனைவருக்கும் கொடுங்க.

ரசமலாய்
1/6

தேவையான பொருட்கள் : கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர், எலுமிச்சை - 2 பழம், சோள மாவு - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 4 கப், சர்க்கரை - 1 கப், பால் -500 மில்லி , குங்குமப்பூ, சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, பிஸ்தா, பாதாம்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் கொழுப்பு நிறைந்த பாலை ஊற்றி கொதிக்கவிடவும். அதில் இரண்டு பழம் எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு திரிய விடவும்.
3/6

அதன் பிறகு திரிந்த பாலை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதன்பிறகு திரிந்த பாலில் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை வடை போல தட்டி வைத்து கொள்ளவும்.
4/6

அடுத்தது, சர்க்கரை பாகு காய்ச்ச, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை பாகில் செய்த உருண்டைகளை சேர்த்து 15 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
5/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பிஸ்தா மற்றும் பாதம் நறுக்கி சேர்க்கவும்.
6/6

10 நிமிடம் கொதித்த பிறகு அடுப்பிலிருந்து பாலை இறக்கவும், அந்த உருண்டைகளை பாலில் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைத்தால் சுவையான ரசமலாய் தயார்.
Published at : 15 Jul 2024 10:38 AM (IST)
Tags :
Sweets Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion