மேலும் அறிய
Nilakadalai Podi : சட்னி அரைக்க சோம்பலாக இருந்தால் இந்த பொடியை அரைச்சு வச்சிக்கோங்க!
Nilakadalai Podi : இந்த நிலக்கடலைப் பொடியில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, வெள்ளை சாதம், இட்லி தோசையுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

நிலக்கடலைப் பொடி
1/6

தேவையான பொருட்கள் : நிலக்கடலை - 250 கிராம் , கடலை பருப்பு - 4 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி, தனியா - 5 மேசைக்கரண்டி, சீரகம் - 2 மேசைக்கரண்டி , சிவப்பு மிளகாய் - 20 , புளி , பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி , கல் உப்பு.
2/6

செய்முறை : ஒரு பானில் நிலக்கடலை சேர்த்து 10 நிமிடம் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது அதே பானில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
4/6

அதன் பின் தனியா, சீரகம், சிவப்பு மிளகாய், புளி, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
5/6

அடுத்தது அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தூள், கல் உப்பு, சேர்த்து ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற விடவும்.
6/6

ஆறவைத்த மசாலா கலவையை மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைக்கவும். அடுத்து வறுத்த நிலக்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் அருமையான நிலக்கடலை பொடி தயார்
Published at : 09 Sep 2024 10:24 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion