Breaking News Tamil LIVE: ராசிபுரத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவிப்பு
இன்றளவும் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் ஓமிக்ரான் வகை கொரோனா குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது.
LIVE

Background
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு- விசாரணை நடத்த முடிவு
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல். இவரது மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
அரசு, தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை!
பள்ளிகளில் புதிதாக சேர வரும் 8-ஆம் வகுப்பு மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாற்றுச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது என்று பள்ளி கல்வித் துறை வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 5,8, 10, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாமதமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை வலியுறுத்து உள்ளது.
கூட்டுறவு - உணவு - நுகர்வோர் துறை முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு - உணவு - நுகர்வோர் துறை முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
ராசிபுரத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவிப்பு
ராசிபுரத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராசிபுரத்தில் பணியின் போது உயிரிழந்த துணிச்சலான காவலர்கள் திரு.சந்திரசேகர் மற்றும் திரு.தேவராஜன் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மாண்புமிகு ஆளுநர்,
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) June 12, 2022
திரு. ஆர்.என்.ரவி, அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

